வணக்கம் அன்பர்களே...
சில தினங்களுக்கு
முன் நமதூர்
முக்கியஸ்தர்
ஆர்.இளங்கோ(மத்திய
தி.மு.க பொதுக்குழு
உறுப்பினர்)
துபாய் வருகை தந்திருந்தார்
ஹோட்டல் பிரசிடென்ட்டில் தங்கியிருந்த
அவரை மதுக்கூர்.காம்
சார்பில்
திரு இஸாக்
அவர்கள் திரு தேவா
மற்றும் மதுக்கூர்
தமிழரசன்
ஆகியோர் சந்தித்தனர், அப்போது
மதுக்கூர்
முன்னேற்றம்
மற்றும் தற்போதைய நிலவரம்
பற்றி பேசப்பட்டது,

சொக்கனாவூர் திரு.R.
இளங்கோ (மத்திய தி.மு.க. பொதுக்குழு
உறுப்பினர்)
அப்போது மதுக்கூர்
இணையம் சார்பில் சில கேள்விகள்
முன் வைக்கப்பட்டது.
Q: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின்
கிளை மதுக்கூருக்கு
வரவேண்டும்
என்று நமது இணையம்
சார்பாக முதல் குரல்
கொடுத்து
முயற்சிகளை
மேற்கொண்டோம்,
தற்போதுள்ள
நிலைமை படி மதுக்கூருக்கு
இட ஒதுக்கீடு
கிடைத்துள்ளதாக
அறிந்து கொண்டோம். அதி விரைவில்
நமது ஊருக்கு
வங்கியின்
கிளை வர
எங்களுக்கு உதவுவீர்களா?

நமது இணைய குழுவினருடன்
திரு. இளங்கோ
அவர்கள்…
Q: நமது ஊரில்
அரசு மருத்துவமனையின்
பயன்பாடு
மிகவும் குறைவாகவே
உள்ளது. மக்களின் அடிப்படை
தேவைகளுக்காக
வேறு நகரங்களுக்கு
செல்லும்
நிலை உள்ளது. நமது ஊரின்
மருத்துவ
வசதிகளுக்காக
என்ன திட்டங்களை
இந்த அரசு
செய்ய இருக்கிறது?
திரு.R.
இளங்கோ:
என் மனதில் நெடு நாளாக
இருந்ததைத்தான்
நீங்கள் கேள்வியாக
கேட்டு இருக்கிறீர்கள். விரைவிலேயே படுக்கை
வசதிகளுடன்
கூடிய நவீன அரசு
மருத்துவமனை
நமது ஊருக்கு
வர இருக்கிறது.
இன்னும் நிறைய கேள்விகள்
கேட்க நமக்கும் ஆசைதான் ஆனால் திரு. இளங்கோ
அவர்களின்
இந்த பயணம்
மிக குறைந்த
நாட்களேதான்
அதன் பொருட்டு
அவர் நிறைய
நிகழ்சிகளில்
பங்கேற்க
வேண்டிய இருந்ததால்
நாம் நமது
கேள்விகளையும்
குறைத்துக்கொண்டோம்.
மதுக்கூர் மக்களின் முன்னேற்றத்திற்க்காக
எல்லாவித
உதவிகளையும்
செய்ய எந்த
நேரமும் காத்திருப்பதாகவும்
உறுதியளித்தார்,அதற்க்கு
திரு இஸாக்
அவர்கள் நன்றியினை
தெரிவித்துக்கொண்டார்
சந்திப்பின்
முடிவில்
நமது இணைய
ஆசிரியர்
திரு இஸாக்
அவர்கள், மற்றும் எடிட்டர் திரு தேவா
ஆகியோர் நினைவுப்பரிசினை
வ்ழங்கினார்கள்
இங்ஙனம் திரு இளங்கோ
அவர்களுடனான
சந்திப்பு
இனிதே நிறைவுற்றது.
- மதுக்கூர்
தமிழரசன்.