readwhattold.asp

POST YOUR MESSAGE

 Messages - 2008

Latest Message

2/6/2012 11:39:29 AM
ஆத்மார்த்த நட்புகளே

என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

ஊரில் அனைவரும் நலம்
பொழுதுகள் இறையருளால் இனிதே..

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மிகவும் சிரமம்
கடந்த ஒரு மாதமாக மின்வெட்டு அதிகம் அதிகம்
காலை 2 மணி நேரம் மதியம் 2 மணி நேரம்
மாலை இரன்டு நேரங்களாக சுமார் 90 நிமிடங்கள்.

இதனால் பலருக்கும் மிகவும் பாதிப்பு
உதாரனமாக நகலகங்கள் பெரும் பாதிப்பு,
அதே போல அச்சகங்கள், அது போல
இனைய சேவை நடத்தும் இனைய மையங்கள்.
இன்னும் சொல்ல வேன்டுமானால்
சிகை அலங்கார கடைக்கு தாடியை ட்ரிம் செய்ய சொன்னால்
கரன்ட் இல்லை என்கிறார் அட தேவுடாஆஆஆஆஆஆஆஅ
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


2/6/2012 11:33:13 AM
அக்கரை செய்திகள்

SARA 1 MALAYSIA
மலேசியர்களை ஒரே மலேசியா எனும் கொள்கை கீழ் இணைத்து, அனைத்து இன மக்களும் தேசிய நீரோட்டத்தில் சரி சமமான பயனைப் பெறும் வண்ணம் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகின்றது.
ஒரே மலேசியா கடை, ஒரே மலேசியா கிளினிக், ஒரே மலேசியா உணவகம் , ஒரே மலேசியா வீடமைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் வரிசையில் புதிதாக அறிமுகம் கண்டுள்ளது “ஒரே மலேசியா மக்கள் பங்குரிமைத் திட்டம்”.

புத்ரா உலக வாணிப மையத்தில் இம்மாதம் 12 ஆம் தேதி பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் இத்திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான மாத வருமானத்தைப் பெறுபவர்கள், குறைந்தது ஐயாயிரம் ரிங்கிட் பணத்தை முதலீடு செய்து வருமானத்தை ஈட்டுவதற்கு இத்திட்டம் வழி வகுக்கிறது.

இதற்காக அரசாங்கம் பத்து கோடி ரிங்கிட் (100 JUTA) உதவித் தொகையையும் வழங்கியுள்ளது.

சேமிப்பு உள்ளவர்கள் சொந்த பணத்தை முதலீடு செய்யும் வேளையில் சேமிப்பு இல்லாதவர்களுக்காக குறிப்பிட்ட வங்கிகள் கடனுதவியை வழங்குகின்றன.

ஒவ்வொரு மாதமும் வருமானம் நிச்சயம் உள்ளது என்பது உத்தரவாதம்.மாதத்துக்கு 134 ரிங்கிட் வருமானம் கிடைக்கும்.அப்படி வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருந்தால், அவற்றிடம் 84 ரிங்கிட்டைச் செலுத்த வேண்டும்.மீதம் ஐம்பது ரிங்கிட் உங்களுக்குச் சொந்தமாகும்.)

சிறிய தொகை என்று அலட்சியமாக எண்ணி விடாமல் இதனை நீண்ட கால அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.

உதாரணமாக, ஐயாயிரம் ரிங்கிட்டை முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வருமானத்தைச் செலவிடாமல் இருந்தால் ஐந்தாண்டுகளில் அதன் எண்ணிக்கை குறைந்தது 13 ஆயிரம் ரிங்கிட்டாக அதிகரிக்கும்.

இம்மாதம் முப்பதாம் தேதி தொடங்கி மக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வாழ்க்கை செலவீனம் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் அரசாங்கம் ஏற்படுத்தித் தரும் இதுபோன்ற திட்டங்களின் வாயிலாக குடும்ப பொருளாதார நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும்.

“நாம் குறைந்த வருமானத்தைப் பெறுகிறோம் , வறுமை கோட்டின் கீழ் வாழ்கிறோம்” என்ற சிந்தனைக்கு விடைக்கொடுத்து, நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டிய கால கட்டம் இது.

அதிலும் பண பலம் படைத்தவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்ற கூற்றுக்கு எதிர்மாறாக குறைந்த வருமானம் பெறுபவர்களும் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.

எனவே, ‘ஒரே மலேசியா மக்கள் பங்குரிமைத் திட்டத்தில்” இணைந்து பொருளாதார மேம்பாட்டை பெறுவோம்.



anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


1/14/2012 11:38:28 AM
தேனீர் அருந்தும் வேளையில்

அன்பானவர்களே
நலம் நலமறிய

என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
ஊரில் அனைவரும் நலம்.
இரன்டு மூன்று நாட்களாக பனி அந்த அளவுக்கு இல்லை.
ஊரில் வெயில் வீச துவங்குகிறது.

பொங்கல் வியாபாரம் களை கட்டி வருகிறது.
கரும்பு முதல் மஞ்சள் என இல்லாமல்
புதுப்பானைகள் மாலைகள் என அனைத்தும் சந்தைக்கு வந்துள்ளது.
பொங்கல் சந்தை களை கட்டி வருகிறது.
நேற்று மாலையே நல்ல கூட்டம் இருந்தது.
இன்று இரு சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல முடியாது.
இன்று ஒரு கட்டு கரும்பின் விலை ரூபாய் 150.00
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


1/14/2012 11:28:05 AM
மார்கழி மாசத்துக்கு?

மார்கழி மாசம் என்றாலே
நமது நினைவுக்கு வருவது பனி படரும் பொழுதுகள்
கவிஞர்கள் கூட எழுதுவாங்க,
'பனி இல்லாத மார்கழியா என?'
இது இல்லாமல் சில வணக்க வழிபாடுகள்
நினைவுக்கு வரும்
வீடுகளின் முன் வண்ணக்கோலங்கள்
அதிலே பூசனிப்பூ,
ஆண்டாள் பாசுரம், திருப்பாவை,
திருவெம்பாவை, குளிர், என
இப்படியே தொடர்ந்தாலும்,
கூதலான மார்கழியில் நீளமான ராத்திரிகளில்
தொடரும் சங்கீத கச்சேரிகள் இன்று தமிழக பண்பாட்டோடு இணைந்து உள்ளது என்றால் மிகையல்ல.


1928ம் வருடம் டிஸம்பர் மாதம்
சென்னை மயிலாப்பூரில்
காங்கிரஸ் மாநாடு நடந்தது.
அந்த மாநாடு நடந்த போது
ஒரு பொழுது போக்கிற்காக அந்த மா நாட்டின் போது
சங்கீத கச்சேரிகள் வைத்தனர்.. அப்போது துவங்கிய தான்
சங்கீதமும் மார்கழியும், அதற்கு அடுத்த வருடமும்
அதே டிஸம்பர் மாதத்தில் காங்கிரஸ் மா நாடு நடந்தது.
அப்போதும் மா நாட்டின் இடையில் கச்சேரிகள் நடந்தது.
அன்று துவங்கிய இசையின் துவக்கம்,
இன்று சென்னையில் சபாக்களில் அரங்கேறியது மட்டுமல்லாமல்,
திருவையாறில் இசை விழாவாகவும் நடைபெறுகிறது.

anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


1/4/2012 11:53:32 AM
01.01.2012

பிறந்தது ஆங்கிலபுத்தாண்டு
அனைவரும் எதிர்பார்த்த
ஆங்கில புத்தாண்டு
குளிரும் மார்கழியில்
தானே புயலுக்கு பின்
நேரம் வந்ததை உலகம் முழுவதும்
உற்சாகமாக கொண்டாடியதை
தொலைக்காட்சியில் பார்த்தோம்
இது அனைவரின் எதிர்பார்ப்பு என சொல்லலாம்.
இறை வேதங்கள் காலத்தை குறை சொல்லாதீர்கள் என சொன்னாலும்,
அன்றாடம் மக்களின் பழக்க வழக்கத்தில்
குறை சொல்லும் வழக்கம் உள்ளது.
இதை கூட அஷ்டமியில் பிறந்தது என சொல்லல்லாம்.

சென்ற ஆண்டை பொறுத்தவரை மிகவும் மந்தமான ஆண்டு என சொல்லலாம்.
கடந்த இரண்டு ஆண்டாக இருந்த பொறுளாதார தேக்கம்,
வேலை இல்லாமை,
எல்லாம் அப்படியே தான்..
எந்த் மாற்றமும் இல்லை.
இன்னும் சொல்லவேன்டுமானால்,
தகவல் தொழில் நுட்பம், நோய்கள்,
இயற்கை பேரழிவுகள்,
பருவனிலை மாற்றம், கடன் சுமைகள்,
மன உளைச்சல்கள், தொழில்கள் ஏற்றம் இறக்கம்,
காதல், அன்பு, சாமியார்கள், மாமியார்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள்,
என அலைக்கழிக்கப்பட்ட மக்கள் கடைசியாக முல்லைப் பெரியார் என வந்து நின்றனர்.
சரி அதானே என்றால் ..
தானாக வந்தது தானே புயல்..
சுனாமியை விட பெரிய தாக்கம் என்றார்
என பாண்டி நண்பர்.
அரசாங்கமே என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறது.. அதன் உண்மை.

சரி போனது போகட்டும்
நடப்பது நல்லவையாக இருக்கட்டும்.
இறைவன் நண்மையை நாடுவானாக..
என இறைவனிடம் வேண்டி அடியெடுத்து வைத்துள்ளோம்.
2012 பொறுத்தவரை நாம் எதிர் பார்த்து ஆச்சர்யபடுவது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி.

அன்றைய காலங்களில்
காற்றலைகளில் செய்தியை அனுப்ப
கண்டு பிடித்த மார்கோனி..
அதன் வடிவில் உருவான வானொலி..
அதன் தொடர்ச்சியாக தொலைபேசி
இன்று அதன் அசூர வளர்ச்சி யப்பா.. யப்பா......................ஆஆஆ
அன்றைய காலங்களில் தகவல் தொடர்பு கிடையாது..
நமது குடும்ப உறுப்பினர்
வெளி நாட்டில் இருக்கிறார் என்றால்
ஒரே தொடர்பு கடிதங்கள் அதன் பரிமாற்றங்கள் தான்.
நாம் ஊருக்கு பேச வேண்டும்
கால் புக் பண்ணித்தான் பேசவேண்டும்.
அதை ட்ரங்க் கால் என்பார்கள்.
போன் இனைப்பகத்திலிருந்து கொடுக்கும் போது
ஸார் உங்களுக்கு ட்ரங்க் கால்
மதராஸிலிருந்து வந்து இருக்கு என்பார்கள்
இன்னும் சொல்லப்போனால் அன்று மதுக்கூரிலிருந்து
பட்டுக்கோட்டைக்கு கால் புக் பண்ணி
இனைப்பகத்திலிருந்து பின்னர் நம்மை அழைத்து பேச கொடுப்பார்கள்.
இதற்கு சுமார் 5 மணி நேரம் ஆகும்.. ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அதற்குள் நாம் சைக்கிளில் சென்று வந்து விடலாம்.
அன்று வெளி நாட்டில் இருந்து
நாம் பேச வேண்டுமானால்,
அங்கே கால் புக் பண்ணி விட்டு காத்திருக்க வேண்டும்.
நமக்கு கால் கிடைக்க பல மணி நேரங்கள் ஆகும்.
பாம்பே ஆபரேட்டர் மதறாஸ்க்கு அழைத்து
அவர் மன்னார்குடி அழைத்து
அவர்கள் நம்ம ஊரு போஸ்ட் ஆபிஸ்க்கு கூப்பிடுவார்கள்.
போஸ்ட் ஆபிஸில் இருந்து நம்ம வீட்டுக்கு ஆள் வரும்.
உங்க வீட்டில் இன்ன பெயரில் உள்ளவருக்கு போன் வந்து இருக்கு வாங்க
என அழைத்த பின் அவர் வந்து நம்மிடம் பேசுவார்..
அட தேவுடாஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆச்சர்யம் வேண்டாம் இதான் அன்றைய நடைமுறைகள்.
மன்னார்குடி பழங்கால முனிசிபாலிடி என்பதையும் நினைவூட்டுகிறேன்.
அப்போது நாம் எதிர் முனையில் அங்கே காத்திருப்போம்.
அந்த காத்திருப்பில் மூனு சாயா,
ஆறு சிகரெட் போகிடும்.
அந்த காத்திருப்புக்கு பின் லைன் கிடைக்கும்.
பாம்பே ஆபரேட்டர் நம்மை அழைப்பார்.
ஸார் ரெடியா இருங்க லைன் கொடுக்கிறேன் என்பார்.
பேச போன் எடுக்கும்போது ஒரு பதட்டம் நம்மிடம் இருக்கும்.
லைன் மதறாஸ் போய்,
நம்ம போஸ்ட் ஆபிஸ் வந்த பின்
'பாத் கரோ' என சப்தம்..
பேசும் போது
நம்ம போஸ்ட் ஆபிஸில் உள்ளவர் சொல்வார்
ஸார் அவர் அம்மா குளத்துக்கு
குளிக்க போயிருக்காராம்
ஒரு மணி நேரம் சென்று பேசுங்க என.. ஆஆஆஆஆஅ???!!!
இன்று அதன் வளர்ச்சிய பாருங்க
அலைபேசியில் என்ன என்ன இருக்கு
அது ஒரு மினி கம்ப்யூட்டர் ஆச்சி.
தகவல் தொடர்பு மட்டு மல்ல
பொழுது போக்கு அம்சமும் நிறைந்து இருக்கு..

ம்ம்ம்.. இறைவனிடம்
நல்ல உணவு, நோயற்ற வாழ்க்கை, பயன் தரக்கூடிய கல்வி
இவைகளை கேட்டு பிரார்த்தித்து
காலங்கள் நமக்கு நல்லதாக அமைய
பிராத்தித்தவனாக.............


anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


1/2/2012 3:33:16 PM
ஆத்மார்த்த நட்புகளே

நலம் நலமறிய பேராவல்

திரை கடல் கடந்து திரவியம் தேடி
பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழ்ந்து
உலகின் வசதியுடன்
ஆடம்பர வாகனங்களில்
பவனி வந்தாலும்...
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தாலும்
தாயகத்தில் இருக்கும் தம் இனத்துடன் உறவாடும் போது
கேட்கும் வழக்கமான ஒரு கேள்வி?!

நம்ம ஊரு எப்படி இருக்கு?
ஹாஆஆஆஆஆஆஆ...
உண்மை தான்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
தந்தையர் நாடென்னும் போதினிலே..
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே...
என்றால் மிகையல்ல...

என்ன தான் குளிரில் வாடினாலும்
விடுமுறை நாட்களில் அறைகளில் முடங்கினாலும்
இந்தக்கேள்விக்கு ஒரு சந்தோசம் வருமே அதான் மனித இயல்பு..

எல்லா புகழும் இறைவனுக்கே!

நமது மக்கள் சொல்வது போல
நம்ம ஊருக்கு என்ன
ஊர் நலம்..
ஊரில் அனைவரும் நலம்
ஆனால், ஜலதோஷத்துடன்..

ஆமாங்க.. மார்கழி குளிர்
அதுவும் நேற்றும் இன்றும் மூடுபனி
இன்று காலை நல்ல மூடுபனி
நாம் இருப்பது ஏதாவது
மலைவாழிடத்திலோ
இல்லை கஷ்மீர் பள்ளத்தாக்கிலோ அல்ல..
நம்ம ஊரில் இருப்பது புதுக்குளம் பள்ளத்தாக்கு தான்.
ஆனாலும் இங்கே நல்ல மூடுபனி..

ஆங்கில புத்தாண்டு பிறந்தது..
பலரும் தனது இல்லங்களில்
வண்ணக்கோலங்களில் happy new year 2012
என சாயம் தீட்டி இருந்தனர்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


12/22/2011 8:56:46 PM
Tea Time

ஆத்மார்த்த நட்புகளே

என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

ஊரில் பொழுதுகள் செல்கிறது..

மார்கழி திங்கள் சொல்லவா வேண்டும்.
அதிகாலை குளிரும் சாரலும் ஒரு புறம்
அதுபோல பக்தி கானங்கள் காற்றலைகளில்
சில நேரம் சுப்புலெட்சுமி அம்மாவின் சுப்ரபாதம்
அவங்க குரலை தவிர வேற யார் குரலும் இது வரை பதியப்படவில்லை.
அதாவது சமஸ்கிருதத்தில்...

கடந்த இரன்டு நாட்களாக ஊரில் தட்பவெப்ப நிலை பரவாயில்லை.
அதற்கு முன் தொடர்ந்து மூன்று நாட்கள்
சூரிய வெளிச்சமே பூமியில் இல்லை..
மக்கள் மார்கழி சாரலில் பெரும் அவதிப்பட்டனர்.
அ துவும் பள்ளிக்குழந்தைகள்
இந்த குளிரில் தேர்வு எழுத....
சமீபத்தில் மறைந்த ஒரு நடிகர்
பழைய ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்த்
இப்படி ஒரு நடிகரை நம்மில் பலருக்கு தெரியாது.
ஆனால், அந்த காலத்தில் மும்பையில் வாழ்ந்த நமது மக்களுக்கும்,
ஹிந்தி சினிமா பாடல்களுடன் தொடர்புள்ள

எப்படி மலபார் முஸ்லிம்களுக்கும்
பழைய ஹிந்தி பாடல்களுக்கும் தொடர்பு உள்ளதோ?
அது போல் நமதூர் மக்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
தேவ் ஆனந்த் அறிமுகமானது 1946 என்பது நினைவில்..

இவரின் ஹிட்டான ஜுவல் தீப் என்ற படம்
தமிழில் ராஜா என்ற பெயரில் வந்தது..
எங்கே நமது வாசகர்களுக்காக...
மும்பையின் பிரதான வீதிகளில்
ஒலிக்குமே அந்த பழைய பாடல்கள்..

ஹை அப்னா தில் ஆவாரா....
ஹா...ஹா...)))) என்ன அழகான பாடல்


anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


12/17/2011 9:32:12 PM
அவஸ்தைகள் பலவிதம்

இன்று ஊடகங்களில் செய்திகள் வருகிறதே..
கேரளாவில் இருந்து தமிழர்கள் வருகிறார்கள் என..
அங்கே இருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள் என..
என்ன கொடுமை இது ..
மலையாளத்தில் சொல்லவேண்டுமானால் தாலவட்டம்....

கேரள தமிழ்னாடு உறவு சாதாரன உறவு இல்லை என சொல்லலாம்.
தொழில், பொருளாதாரம், சம்பந்தம் என அனைத்திலும் பந்தம் உண்டு.

தமிழகத்தில் முழுக்க மலையாளம் பேசும் கிராமம் உண்டு
கேரளத்தில் முழுக்க முழுக்க தமிழ் பேசும் கிராமங்கள் உண்டு
எத்தனை காலமாக தமிழர்கள் அங்கே வாழ்கிறார்கள்
எத்தனை காலமாக மலையாளிகள் இங்கெ வாழ்கிறார்கள்.
இப்போ ஏன் இந்த கொலைவெறி?
இங்கே மலையாளிகள் தொழில் கல்வி சினிமா சம்பந்தமாக மட்டுமல்லாமல்
பல பெண்கள் மருமகள்களாக தமிழகத்தில்..
அங்கே தொழில் வேலை என கேரளத்தில்...
நமதூரிலும் பேக்கரி வைத்துக்கொண்டு
சுமார் 25வருடமாக மலையாளிகள் வாழ்கிறார்கள் என்றால் மிகையல்ல..
நமது தமிழர்கள் தோட்ட வேலைகள் மட்டுமல்லாமல்,
சிகை அலங்காரம், கட்டுமானம் கடைகள் என தொழில் நிமித்தமாகவும் வாழ்கிறார்கள்.

இப்படி ஒரு வாழ்வில்
திடீர் என அரசியலால் ஏன் இந்த கொலைவெறி?!
இரு மானிலத்தவர்களுமே அதிகம் படித்தவர்கள்
இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஒரு தமிழர்
இந்தியாவின் வெளியுறவு துறை ஒரு மலையாளி
இது போன்ற உயர் பதவிகளில் ஏராளம்.. ஏராளம்...

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
நீதி மன்ற உத்தரவை மதிப்பது அவசியம்.
அதை விட்டு விட்டு அரசியலாக்கி சுய லாபம் காண்பது
மலையாளிகளுக்கு நல்லதல்ல...
இது போன்ற ஒரு நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் எத்தனை எத்தனை மலையாளிகள்?
நமது தேசத்திற்கு ஒரு வெட்கக்கேடான செயல்கள்
என மலையாளிகள் உணரவேண்டும்..
அருகாமை மாவட்டமான கன்யாகுமரியுடன்
அவர்களுக்கு ஒரு பந்தம் உண்டு..
காரணம் அங்கே நிறைய திருமணங்கள்..
அது போல தலஸ்தனமான திருவனந்தபுரத்தில்..
கோட்டைக்ககம், பழவங்காடி,பாளையம்,கிள்ளிப்பாலம்,
தம்பானுர் ,சாலை என அனைத்து இடங்களிலும்
தமிழ் மக்கள் தொழில்கள் செய்கின்றனர்..
இன்னும் சொல்லப்போனால் கேரளாவின் கவர்னர் யார் தெரியுமா?
அவரும் ஒரு தமிழர் தான்
மரியாதைக்குரிய பாரூக் மரைக்காயர்....)))ha..
தலஸ்தானத்தில் உள்ள அமைதி
கேரளா முழுவதும் தொடரவேண்டும்
அதான் இந்தியாவின் இறையான்மைக்கும்
ஒற்றுமைக்கும், கலாச்சாரத்திற்கும் சிறந்தது..

சிந்து நதியின் மிசை நிலவினிலே..
சேர நாட்டிளம் பெண்களுடனே..
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து...


anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


12/12/2011 9:16:07 PM
ஆத்மார்த்த நட்புகளே

என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

போகுது பொழுதுகள் இனிதே..
ஊரில் கடந்த இரு நாட்களாக மழை இருந்தாலும்
இன்று மழை இல்லை.. இன்னும் சில தினங்களில்
மார்கழி வர இருக்கிறது.. இனி பனி காலங்கள் தான்..
இப்போதும் அதிகாலை நேரங்களில் பனி பெய்கிறது.
இது முன்பனிக்காலம் என்பதால் அந்த அளவுக்கு இன்னும் தெரியவிலை...
முல்லைப் பெரியார்

தமிழக கேரள எல்லையில்
ஏற்பட்டுள்ள இந்த பதற்றம் அன்றாடம்
நாம் ஊடகங்களில் பார்த்து வருகிறோம்.
நேற்று கூட நமதூரில் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதோ முல்லை பெரியார் சில தகவல்கள்

சிவகிரியில் தோன்றும் பெரியாறு,
48 கி.மீ.ல் முல்லை என்ற இடத்தில் இன்னொரு
ஆற்றில் சங்கமம்.
அங்கே நீரை தேக்கி ஒரு அனை கட்டி,
அந்த தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பி விட நினைத்தார்
இந்தியா வந்த ஆங்கில பொறியாளர் பென்னி குக்.
அப்படி தேக்கினால் 8000 ஏக்கர் நீரில் மூழ்கும்.
அதற்காக ஒரு ஒப்பந்தம். எப்படி?
1886 ஆம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி
ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் 40,000 ரூபாய்
நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம் எத்தனை வருடங்களுக்கு தெரியுமா?
999 வருடங்களுக்கு...????!!!!

இப்போது ஏக்கருக்கு முப்பது ரூபாய் வீதம்
2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.
கேரள ஊடகங்கள் வதந்திகளை பரப்பி வருகிறதே...

முல்லை பெரியார் அனை கடலில் கலக்கும் முன்
12 அனைகளை கடந்த பின் தான் கடலில் கலக்கிறது..
ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும்
அதை சமாளிக்க எத்தனையோ முயற்சிகள் எடுக்கலாம்.

வழக்கம் போல சொல்லவேண்டுமானால்
இதை அரசியலாக்கி இரு மா நில மக்களின்
சகோதர பாசத்தை உறவுகளை சிதைக்கிறார்கள்.

ஆனால், இதுவரை திருவனந்தபுரம்- நாகர்கோவில்
சாலைகளில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.


anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


12/3/2011 8:30:55 PM
துபாயில் நான்…


இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…
அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற‌
தீர்மானம் செய்ததால்…

அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய‌
ஆகாய ஊர்தியும்,
அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத‌
அனுபவம் ஆனது.
அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்…
இறங்கும் நேரம் வந்து விட‍- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லை…
மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…
அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்
இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்,
நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல‌ இருக்கும்,
அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன‌ இருக்கும்…
உற‌வோடு உற‌வாட‌
தொலைபேசி என‌க்கு,
அதில் போன‌ காசுக்கு
இங்கேது க‌ண‌க்கு…
இங்கே ம‌னைவியோடு உற‌வாடி
பிள்ளை பெற‌முடியாம‌ல்,
பில்லை பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்…
இள‌மையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
கால‌மும் காசுக்கு
க‌ரியாகி போச்சு,
த‌லையெல்லாம் அத‌ற்குள்ளே
ந‌ரையாகி போச்சு,
காசாவ‌து மீந்த‌தா
செல‌வாகி போச்சு…
வ‌ருமான‌ம் வ‌ருமுன்னே
செல‌வு வ‌ந்து சேர்ந்திடும்,
வெறுமாக‌ ஊர் சென்றால்
உற‌வு வ‌ந்து சேருமா?

காசுக் க‌ண‌க்குக‌ள்
க‌வ‌லை த‌ருகிற‌து,
க‌ட‌ந்த‌ கால‌ம்தான்
க‌ண்ணில் வ‌ருகிற‌து…
இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாது…
எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,
சொர்க‌மே த‌ந்தாலும் ‍ ம‌ன‌தில்
தாய் நாடு சாகாது…
namathu vasakar E-mail: kavithai City: mkr Country: tn49


11/21/2011 2:03:45 PM
அவஸ்தைகள் பலவிதம்

அன்றாடம் செய்திகளிலும், ஊடகங்களிலும்
தினமும் இப்போது அலசப்படும் ஒரு செய்தி
பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு,

இது வழக்கத்தில் அன்றாட வாழ்வில் அத்தியாசியமான ஒன்று.
இது எல்லோருக்கும் தினமும் பயன்படுத்த வேண்டி இருப்பதால்
இதன் தாக்கம் பொது மக்கள் உணர்கிறார்கள்.
இன்று பார்த்த செய்தியில் பால் விலை உயர்வால்
ஆவின் விற்பனை சரிவு என ஒரு செய்தி.

பலரும் வெர்ரெங்கு இது எந்த மொழியோ எனக்கு ஒரு தெரியாது
வழக்கத்தில் உள்ள ஒரு சொல் இந்த வெர்ரெங்குக்கு மாறிவிட்டார்கள்.
நம்ம வீடுகளில் ஏற்கனவே பழக்கம் உள்ளது சுலைமானி..
இது மக்கள் குடித்து பழகி விடுவார்கள்.
இல்லை பழக்கி தான் ஆகனும் காலத்தில் கட்டாயம்.
இது போன்ற பாதிப்புக்கு உள்ளாவது யார்
நடுத்தர மக்கள் தான்..
அவர்களுக்கு பால் விலை உயர்ந்தால் என்ன?
வீட்டில் சுத்தமான டிகிரி காபி குடிப்பார்கள்.
ஆனால் காலை முதல் மாலை கூலி வேலை செய்து விட்டு
வேலைக்கு போகும் போதும், வரும் போதும் டீ குடிக்கும் பழக்கம் உள்ள தொழிலாளர்கள்
இதன் தாக்கத்தால் அச்சம் அடைவார்கள், கஷ்டப்படுவார்கள் என்பது உண்மை.

மேலும் நமது ஊரில் இப்போது எல்லாம் பெண்கள் வேலைக்கு கிடைப்பதில்லை.
காரனம் வேலைக்கு செல்லும் எண்ணம் வந்து விட்டதால்
அவர்கள் திருப்பூர் சென்று விடுகிறார்கள். ஆங்கே வீடு வாடகைக்கு எடுத்து
நாம் அயல் நாடுகளில் வாழ்வது போல வேலைக்கு சென்று வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் மாதம் ஒருமுறை அல்லது இரன்டு முறை ஊருக்கு வருவதற்கு
இப்போது யோசனை செய்வார்கள்.. காரனம் உதாரனமாக
பட்டுக்கோட்டையில் இருந்து தினமும் பேருந்து திருப்பூர் செல்கிறது.
இதன் பழைய கட்டணம் ரூபாய் 97.00 மட்டும்
இப்போது புதிய கட்டணம் 162.00 ரூபாய்
.....????!!!
எத்தனை சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

இது போன்ற அவஸ்தைகள் எல்லாம் யாருக்கு?
சிரமங்கள் எல்லாம் யாருக்கு?
ஏற்கனவே வாழ்க்கையில் நொந்து நூலாகி போகிறவர்களுக்கு தான்
உயர் மட்ட மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அவர்கள் சொந்த வாகனத்தில் சென்று வருவார்கள்.
ம்ம்ம்.. இன்னும் பார்ப்போம்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn49


11/14/2011 8:09:25 PM
அன்பானவர்களே

நலம் நலமறிய பேராவல்

என்ன சேதி?
எப்படி போகுது பொழுதுகள்

ஊரில் பொழுதுகள் செல்கிறது.
மழை இல்லை..
பருவமழை சுமார் 15 நாட்கள் பெய்தது தான்.
மீண்டும் இன்னும் மழை தொடரவில்லை.

முன் பனிக்காலம்

ஊரில் அதிகாலை நேரங்களில்
நல்ல பனி இருக்கிறது.
ஆனால் சில சமயங்களில் மூடுபனி தொடரும்
இதுவரை அதுபோல மூடுபனி வரவில்லை.

மின் நிறுத்தம் அதிகமாக இருக்கிறது.
சில நேரம் காலை நேரங்களில்
சில நேரம் மத்யம் நேரங்களில்
மாலை நேரங்களில் கட்டாயமாக சுமார் முப்பது நிமிடம்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/29/2011 2:07:29 PM
ஆத்மார்த்த நட்புகளே

நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

சும்மா ஒரு மொக்கை போடத்தான்
குசலம் விசாரிக்க தான்
ஊரில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை
அதாவது எப்போ மழை வரும்
எப்போ மழை பெய்யாது என சொல்ல முடியாது.
சேர நாட்டை நினைவு படுத்துவது போல
அடிக்கடி மழை .. சுமார் 60 மி.மீ க்கும் குறையாமல் மழை.

இன்று அரசியல் நிலவரத்தில்
உதவி தலைவர் தேர்ந்து எடுத்தல்
காலை 10.30 மணிக்கு துவங்கிய
தேர்தலில் முடிவுகள் சுமார் 20 நிமிடம் கழித்து கிடைத்தது.
உதவி தலைவராக ஜீவானந்தம் என்கிற ஆனந்த் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இவர் மேல சூர்யதோட்டத்தில்
15வது வார்டில் நின்று வெற்றி பெற்றவர்.

உலகிலேயே மிகப்பெரிய
உலகிலேயே மிக எடைக்கூடிய
தங்கக்காசு ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.
இது ஆஸ்திரேலியாவில் நடைபெறும்
காமன்வெல்த் நாடுகள் மா நாட்டில் வெளியிடப்பட்டது.

நாம் சில சமயங்களில்
தன்னையே மறந்துட்டேன் என சொல்வது உண்டு.
ஆனால், இது போல்
உயிரினங்கள் சொல்வது என்றால்,
கற்பனை தான் என்போம்.
ஆனால், நிஜத்தில் ஒரு நகைச்சுவையான சம்பவம்
தினமும் நடைபெறுகிறது
நாம் தான் கவனிப்பதில்லை.
சென்னை செல்லும் வழியில்
அனைக்கரை பாலத்தை கடந்து செல்கிறோம்.
நமது ஊரில் இருந்து செல்லும் போது
பாலத்தில் இடது புறத்தில்
மதகுகள் அடைக்கப்பட்டு
தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாலத்தின் வலது புறத்தில் குறைவாக தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கும்.
அந்த பக்கம் செல்லும் போது கவனியுங்கள்
அங்கே சிலர் துணி துவைப்பார்கள்
சிலர் குளித்துக்கொண்டு இருப்பார்கள்
சில சமயம் ஆடு நின்று கொண்டு இருக்கும்.
அவர்கள் அருகிலே முதலைகள் இதமாக
வெயில்பட நீரின் மேல் கிடக்கும்.
இதை படிக்கும் போது புன்னகை வரலாம்.
ஆனால், நிதர்சனமான உண்மை.
முதலில் என் நண்பர்
என்னிடம் சொல்லும் போது நம்பவில்லை.
சும்மா நகைச்சுவைக்காக சொல்கிறார்
என எண்ணினேன்.
ஆனால், சமீபத்தில்
நான் நேரில் அந்தக்காட்சியை
பார்த்த போது தான் நம்பினேன்.
சுமார் ஆறு முதலைகள் நீரின் மேல்..
அங்கே ஒருவர் துணி துவைக்க.. ))))))





எவ்வளவு நாளாச்சி
இது போல ஒரு மானாவரி பக்கம்?!
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/25/2011 1:57:53 PM
Food rules for the rain

The first showers of the monsoon provide relief from the intense heat of summer. However, the rain also brings some health issues that can spoil your mood like food poisoning, diarrhoea, dysentery and cholera. And not all are water-borne. So it is necessary to keep a sharp eye on what you're eating and drinking.

There are some precautions and diet modifications that will help keep you healthy. Here are some basic ones.

l Drink warm beverages. Add mint or ginger or dry ginger powder to tea and hot milk.

l Avoid street and junk food, as very few people have the high immunity to handle the bacterial overload at such places.

l Wash all fruits and vegetables thoroughly, especially leafy ones and cauliflower.

l Eat moderate quantities of food, as the body finds it hard to digest food.

l Avoid fried oily food, that may cause acidity. Opt for grilled or tandoori items that require minimum oil/butter.

l Avoid using too much spice, as this promotes water retention and bloating. Go for medium or low salt food.

l Use plenty of garlic, pepper, ginger, asafoetida, turmeric, coriander and jeera, all of which enhance digestive power and improve immunity.

l Eat foods that are dry in nature. The most popular are makka (corn), chana (chickpea), besan (gram flour) and jow (oats).

l Eat light foods like vegetables, fruits, cereals etc and reduce consumption of meat or fish.

l Avoid sour foods like tamarind (imli), chutneys and pickles as they promote water retention.

l Also avoid eating cut fruits and vegetable outside home because there are more chances of bacterial growth and infection.

l Go for light meat preparations like soups and stews rather than heavy curries.

l Drink only boiled and filtered water.

l Drink plenty of water. Dehydration is possible.

l Don't consume dairy products in large amounts as they are prone to harbour germs at this time.

l Honey is an excellent tonic that helps keep the intestines sterile. It also assists in digestion.

l Eat bitter vegetables like karela (bitter gourd) and herbs like neem (basil), methi (fenugreek) seeds, haldi (turmeric) as they prevents infection.

l Fresh is the best for monsoon, so eat freshly cooked food. Avoid eating food straight out of the fridge. Fresh foods are the best, but if you like to store cooked food in the fridge, heat it gradually and thoroughly before eating.

l Consume lots of Vitamin C through amla and citrus fruits to boost immunity.

The appetite-robbing summer days are gone, and the cool monsoon tempts you to gorge on bhajiyas, sweets, and ever-larger helpings at mealtimes. After all, you have to make up for lost time!

But temper that hearty appetite with a dose of caution; the monsoon is a time when diseases, particularly of the digestive system, are rampant.

The cardinal rule is never eat when you are not hungry. You can eat something in winter just because you find it appetising. Doing this in the monsoon is an invitation to indigestion and accompanying illnesses. Don't let the rain or the health troubles it brings with it get you down. Simply follow these tips and have a healthy monsoon.

The writer is a dietician based in Faridabad.

(நன்றி : ஹிந்து)
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/25/2011 1:48:09 PM
பதவியேற்பு விழா

நமதூர் பேரூராட்சியில் வெற்றி பெற்றவர்களின்
பதவியேற்பு இன்று காலை
செல்லமாக நமதூரை நனைத்த மழையுடன்
அரசு விழா அட்டகாசமாக நடந்தது..
இன்று காலை பத்து மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்க இருந்து, தாமதமாக..,
துவங்கியது.
முதலில் தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்க...
அதன் பின் நிகழ்ச்சிகள் துவங்கியது..
முதலில் தலைவர் பஷீர் அகமது பதவி ஏற்க..
அதன் பின்
வார்டு ஒன்று முதல் அனைத்து
கவுன்சிலர்களும் பதவியேற்றனர்.
முதலில் 1வது வார்டு செல்வி
தனது உறுதி மொழி எடுத்த பின்
முருகையன், மல்லிகா, தமயந்தி என..
ஒருவர் பின் ஒருவராக வந்து
உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பல புது முகங்களும் இன்று பதவியேற்றனர்.
பலரும் கட்சி, கழகங்கள் பாராமல்
பொன்னாடைகள் போர்த்தினர்.
வர்த்தகர்களும் பொன்னாடை போர்த்தினர்.
வந்தவர்கள் அனைவருக்கு வடை மற்றும் ஸ்வீட், அத்துடன் மணமணக்கும் தஞ்சாவூர் காபி,
வீடியோ மற்றும் பல கேமராக்கள் பதிவு எடுத்துக்கொண்டன.
நமது வாசகர்களுக்காக உள்ள சிறப்பு பதிவுகள் விரைவில் தரப்படும்.
ஒரு மணி நேரத்துக்கும் குறையாமல் நடந்த விழா
இறுதியில் தேசிய கீதம் ஒலித்த பின் நிறைவடைந்தது.

கடந்த 3 நாட்களாக நமதூரில் பெய்து வரும்
தொடர் மழையால் ஊரில் பல இடங்களில்
தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நேற்று மாலை வரை பெய்த மழையின் அளவு 23.6 மி.மீ.

நேற்று இரவும் மழை தொடர்ந்தது.
இன்றும் மழை...
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/22/2011 3:26:43 PM
நடந்து முடிந்த
பரபரப்பான உள்ளாட்சி தேர்தலில்
முடிவுகள் தெளிவாக வந்த பின் தரவேண்டும் என்பதால்
இதோ முடிவுகள் ...

பேரூராட்சி தலைவராக பஷீர் அகமது dmk அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்கள்.
தனக்கு அடுத்து வந்த வேட்பாளரான முகைதீன் மரைக்காயரை admk விட சுமார் 413 வாக்குகள் பெற்று
வெற்றி பெற்றுள்ளார்.


வார்டுகளில்
1வது வார்டு செல்வி அதிமுக 318 வாக்குகள் பெற்று வெற்றி
2வது வார்டு முருகையன்அதிமுக 302
3வது வார்டு மல்லிகா சுயேட்சை 366
4வது வார்டு தமயந்திஅதிமுக 455
5வது வார்டு சுரேஷ்அதிமுக 201
6வது வார்டு ஜோதி சுயேட்சை152
7வது வார்டு பெரமையன் dmk 445
8வது வார்டு ரியாஸ் அகமது dmk 137
9வது வார்டு கபார் மமக 128
10வது வார்டு நாகூர்கனிஅதிமுக 060
11வது வார்டு ராஹிலா பீவி dmk 129
12வது வார்டு மும்தாஜ் congress 087
13வது வார்டு சுரேஷ் dmk 234
14வது வார்டு மணிவேல் dmk 098
15வது வார்டு ஜீவானந்தம்அதிமுக 357

வெற்றி பெற்ற அனைவருக்கும்
நமது இனையம் சார்பாக வாழ்த்துக்கள்.

தேர்தல் சுவாரஸ்யங்களில் சில..

அதிக வாக்கு வாங்கிய வேட்பாளர்
தமயந்தி இடையகாடு admk 455
குறைந்த வாக்கு வாங்கிய வேட்பாளர்
ராவுத்தர் தேமுதிக மெயின் ரோடு 006
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்
பெரமையன் திமுக 235
அதிக வேட்பாளர்கள் நின்றது மெயின் ரோடு.

முதல் சுற்று முதல் அதிமுக முன்னிலை வகித்தாலும்
இராமம்பாள் புரம், மற்றும் படப்பைக்காடு முதல்
திமுக முன்னிலை வகித்து வெற்றி வாகை சூடியது.
அதிமுகவுக்கு சாதகமான வார்டுகள்
ஆற்றங்கரை, ஆஸ்பத்திரி ரோடு,
இராமம்பாள் புரம், இடையக்காடு, இந்திரா நகர்,
மேல சூரியதோட்டம்
மற்ற படி பரவலாக அனைத்து வார்டுகளில்
அதிமுகவுக்கு வாக்கு இருந்தது.

ஏற்கனவே இது திமுக வெற்றி பெற்றது தான்
மீன்டும் தக்க வைத்துக்கொண்டது.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn49


10/17/2011 1:37:46 PM
தேர்தல் செய்திகள்

ஊரில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது.
இன்று மதியம் 3 மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தில்
மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் அவர்கள்
திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசுகிறார்.

தேமுதிக வேட்பாளர் , சுயேட்சை வேட்பாளர் ஜான் இவர்களும்
அனைத்து வார்டுகளிலும் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
இவர்களும் கனிசமான வாக்குகளை பெறுவர்கள் என்பது தேர்தல் பார்வையாளர்களின் கருத்து.

முதன் முறையாக தனியாக களமிறங்கும் காங்கிரஸ் 9 வார்டுகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
பல வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள்
நல்ல முறையில் தேர்தல் களம் காண்கிறார்கள்.
எப்படியும் நான்கு வார்டுகளிலாவது வெல்வோம்
என தேர்தல் பணி ஆற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு வலைத்தளம் உள்ளது.
www.mkrcongress.blogspot.com

இது இல்லாமல் பல வார்டுகளிலும்
சுயேட்சை வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

என்னதான் நடந்தாலும்
யார் வந்தாலும்
நமதூரின் புதுக்குளம் தண்ணீர் இன்றி
ஏதோ மொகஞ்சதரா- ஹரப்பாவை தொல்பொருள் துறை
ஆராய்ச்சி செய்வது போல
காட்சியளித்து வருகிறது.
மழை பெய்தால் தான் நிறையும்.


சுகாதார மையம் சார்பாக
சுமார் 25 அலுவலர்கள்
காய்ச்சல் மற்றும் கொசு பற்றிய விழிப்புணர்வுக்காக
சுமார் ஒரு வாரமாக நமதூரில் பணியாற்றி வருகிறார்கள்.
வீட்டுக்கு வீடு அனுமது வாங்கி மருந்தும் அடித்து வருகிறார்கள்.



anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/16/2011 2:06:50 PM
தேர்தல் செய்திகள்

கடைசி நேர வாக்குகள் சேகரிப்பு
அனைத்து கட்சியினரும் நேரம் காலம் பாராமல்
அனைத்து வார்டுகளிலும் வாக்குகள் சேகரிக்கின்றனர்.
பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

வார்டுகளின் விபரங்கள்
1)ஆற்றங்கரை தெரு
2)ஆஸ்பத்திரி ரோடு
3)இரமம்பாள்புரம்
4)இடையகாடு
5)இந்திரா நகர்
6) மெயின் ரோடு
7) படப்பைக்காடு
8) சூரியத்தோட்டம்
9)முகமதியர் தெரு
10) நூருல் இஸ்லாம் தெரு
11) புதுத்தெரு
12)பள்ளிவாசல் தெரு
13) செட்டித்தெரு
14)கொல்லைத்தெரு
15) மேலசூரியதோட்டம்
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/11/2011 8:41:29 PM
ஆத்மார்த்த நட்புகளே

ஊரில் நல்ல வெயில் நிலவுகிறது.
இன்று ஏதோ நமது தமிழக மின் வாரியம்
அவர்களது வேலை பளு காரணமாக
இன்று காலை 9.00 மணி முதல்
மாலை 5.24 வரை மின் தடை செய்து இருந்தார்கள்.
ஊரில் இதனால் சில தொழில் செய்பவர்களுக்கு பாதிப்புகள் இருந்தது.

தேர்தல் பிரச்சாரம் களை கட்டி வருகிறது.
அதிமுக சார்பாக மரைக்காயர் ஒரு புறமும்
திமுக சார்பாக பஷீர் அகமது ஒரு புறமும் வாக்குகள் சேகரிக்கின்றனர்.
அது போல கவுன்சிலருக்கும் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
எல்லா வார்டும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
ஆனால் மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

இதில் மனித நேய மக்கள் கட்சி
காங்கிரஸ் போன்ற கட்சிகள்
தலைவர் பதவிக்கு யாரையும் நிறுத்தாததால்
அவர்கள் தமது வார்டு கவுன்சிலர்க்கு மட்டும் வாக்குகள் சேகரிக்கின்றனர்.
தலைவர்க்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என வாக்குகள் கேட்கவில்லை.


anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/7/2011 8:53:45 PM
நமதூரில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில்
களம் கான இருக்கும் வேட்பாளர்கள் பட்டியல்

பேரூராட்சி தலைவர் தேர்வுக்கு
1) பஷீர் அகமது
2) முகைதீன் மரைக்காயர்
3) அரங்கதுரை
4) ஜான் தனசேகரன்

வார்டு எண் : 1

1) உமா சுந்தரி
2) கலையரசி
3) செல்வி

வார்டு எண் 2
1) நத்தர்ஷா
2) முருகையன்
3) ஜாஹிர் உசேன்

வார்டு எண் 3
1) காளியம்மாள்
2) சந்திரிகா
3) சீதா லெட்சுமி
4) மல்லிகா

வார்டு எண் 4
1)தமயந்தி
2)தமிழ் செல்வி
3)ஜமீம்
4)ஜன்னத் பீவி

வார்டு எண் 5
1)சுரேஷ்
2)சேகர்
3)விஜயகுமார்

வார்டு எண் 6
1)குமார்
2) நிஜாம் ராஜா
3) பஷீர் அகமது
4) பெளசுல் ரஹ்மான்
5) முபாரக் அலி
6) ராவுத்தர்ஷா
7) ஜோதிராஜன்

வார்டு எண் 7
1) பெரமையன்
2) பெரியசாமி
3) மணிகண்டன்

வார்டு எண் 8
1)அப்துல் காசிம்
2) நிஜார்தீன்
3) முகமது அலி
4) ரியாஸ் அகமது
5) ஷேக்பரீது

வார்டு எண் 9
1) அப்துல் கனி
2) கபார்
3) நாகராஜன்
4) ரெங்கசாமி
5) ஜெகபர் சாதிக்
வார்டு எண் 10
1) இத்ரீஸ்
2) கமருதீன்
3) செய்யது முகமது
4) நாகூர்கனி

வார்டு எண் 11
1) நிலோபர் நிஷா
2) பர்ஷானா
3) மும்தாஜ் பேகம்
4) ராஹிலா பீவி

வார்டு எண் 12
1) சிராஜ் நிஷா
2) பெளஜிஹான் பேகம்
3) மும்தாஜ் பேகம்
4) ரஹிஜான் பீவி
5) ரஹிஜான் பீவி

வார்டு எண் 13
1) சுரேஷ்
2) திருனாவுக்கரசு
3) தேவதாஸ்
4) மகேஷ்

வார்டு எண் 14
1) ஆனந்தன்
2) மணிவேல்
3) முகமது ஷெரீப்
4) ராஜசேகரன்

வார்டு எண் 15

1) சதீஷ் குமார்
2) ராமச்சந்திரன்
3) ராவுத்தர்ஷா
4) ஜீவானந்தம்

திமுக
அதிமுக
காங்கிரஸ்
மமக
தேமுதிக
சுயேட்சை

இந்த வேட்பாளர்கள் அனைவரும்
மேற்கண்ட கட்சியின் சார்பிலும்
பலர் சுயேட்சையாகவும் நிற்கின்றனர்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/1/2011 8:59:09 PM
Tea Time

ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி
எப்படி இருக்கீங்க?
ஊரில் நல்ல வெயில் நிலவுகிறது.
அதே நேரத்தில் மாலை நேரங்களில் இதமான
தட்பவெப்ப நிலை உள்ளது.
ஊரில் மீன்டும் மின் தடை அதிகமாக உள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக மின் தடை உள்ளது.
காரனம் தமிழகத்தில் மின் உற்பத்தி குறைவு.
காற்றலை மின்சாரம் இல்லை, ஆந்திரா, ஒரிசா, மகாராஷ்டிரா மின்சாரம் கொடுக்கவில்லை.

இதனால் எப்போது மின்சாரம் இருக்கும்
எப்போது இருக்காது என சொல்ல முடியாது.
குறைந்தது மூன்று மணி நேரம் மின் தடை.

ஊரில் புதியதாக ஒரு ஏடிம் அதாவது
தானாக பணம் பட்டுவாடா செய்யும் இயந்திரம்.
வர இருக்கிறது. இது மெயின் ரோட்டில்
அரசு மேல் நிலை பள்ளியின் எதிரில் வர இருக்கிறது.
இது தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கியின் ஏடிம்.
இன்னும் சில தினங்களில் தனது சேவையை துவங்க இருக்கிறது.

ஊரில் பல வேட்பாளர்கள்
புதியதாக களம் காண்கிறார்கள்.
பேரூராட்சி தலைவர் பதவிக்கு
திமுக சார்பாக பஷீர் அகமது அவர்களும்,
அதிமுக சார்பாக முகைதீன் மரைக்காயர் அவர்களும்
தேமுதிக சார்பாக அரங்கதுரை அவர்களும்
சுயேட்சை வேட்பாளராக ஜான் அவர்களும் களம் இறங்குகிறார்கள்
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn49


10/1/2011 8:55:28 PM
வங்கி மறைசொல் களவாடும் மென்பொருள்
இந்தியாசிங்கப்பூர்குற்றச்செய்திகள்


இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவோரின் மறைச்சொல்லை திருடும் மென்பொருள் குறித்து சிங்கப்பூர் வங்கிகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையம் வழி வங்கி சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிலர் இந்த ஊடுருவும் மென்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதாக லாப நோக்கமில்லாத வங்கிகள் சங்கத்தின் அறிக்கை தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் பாதிக்கப் பட்ட இணையத் தளங்களுக்குச் செல்லும்போது ‘ஸ்பைஐ’ எனப்படும் இந்த மென்பொருள், அவர்களது கணினிகளை ஊடுருவுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மின் அஞ்சலைப் பயன்படுத்துவதாலோ அல்லது தெரியாத கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதாலோ இந்த மென்பொருள் கணினிகளை ஊடுருவுகிறது.

இந்த மென்பொருளினால் பாதிக்கப்பட்ட கணினிகளைப் பயன்படுத்தும்போது, கீழ்க்கண்ட தகவல் ஆங்கிலத்தில் வரும்: “உங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்து வருகிறோம். தயவு செய்து 1 முதல் 10 நிமிடங்கள் வரை பொறுத்திருக்கவும். நாங்கள் உங்களது தகவல்களைச் சரி பார்க்கும்வரை பக்கத்தை மூடாமல் பொறுமையாக இருங்கள்.”

மேலும் கூடுதலான குறுந் தகவலோ அல்லது ஒருமுறை பயன்படுத்தக் கூடிய மறைச்சொல்லோ முதல் பக்கத்தில் கேட்கப்படும். உண்மையான இணையத் தள வங்கி சேவை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மறைச் சொல்லை இரண்டாம் பக்கத்தில் தான் கேட்கும்.

முதல் பக்கத்தில் கேட்காது என்று இது குறித்து விளக்கிய சங்கம் தெரிவித்தது. மேலும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்காத ஒரு முறை பயன் படுத்தப்படும் மறைச் சொல்லையும் குறுந்தகவல் வழி இந்த மென்பொருள் தெரிவிக்கும்.

முக்கியமாக, வாடிக்கையாளர் கள் தங்களது வங்கிக் கணக்கில் தெரிவிக்காத ஒருவரையும் பணம் பெறக்கூடியவராக குறுந்தகவல் வழி இந்த மென்பொருள் பாதிக்கப்பட்டோருக்குத் தெரிவிக்ககும். அத்துடன் வாடிக்கையாளர் தாங்கள் செய்திராத பணப் பரிமாற்றத்தைச் செய்து விட்டதாகவோ அல்லது செய்யப் போவதாகவோ குறுந்தகவல் செய்தியை பெறலாம்.

இது தொடர்பாக விளக்கிய சங்கம், இத்தகைய சந்தேகத்துக்குரிய தகவல்களை வங்கி இணையப் பக்கத்தில் காண நேர்ந்தால் உடனடியாக அந்தப் பக்கத்தை மூடி விடுமாறு கூறியது. பின்னர் உடனடியாக வங்கியை தொடர்புகொள்ளுமாறும் சங்கம் அறிவுறுத்தியது.

அத்துடன் கிடைக்கப்பெறும் குறுந்தகவல்களைக் கவனமாகப் படிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களைச் சங்கம் கேட்டுக்கொண்டது. மேலும் கணினித் தகவல்களை அழிக்கும் வைரஸ் மென்பொருளை அழிக்கக்கூடிய, ‘ஆண்டிவைரஸ்’ மென்பொருளை வாடிக்கையாளர்கள் தங்களது கணினிகளில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் சங்கம் தெரிவித்தது.

anwar E-mail: anwronline@in.com City: mkr Country: tn49


10/1/2011 8:54:14 PM
வங்கி மறைசொல் களவாடும் மென்பொருள்
இந்தியாசிங்கப்பூர்குற்றச்செய்திகள்


இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவோரின் மறைச்சொல்லை திருடும் மென்பொருள் குறித்து சிங்கப்பூர் வங்கிகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையம் வழி வங்கி சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிலர் இந்த ஊடுருவும் மென்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதாக லாப நோக்கமில்லாத வங்கிகள் சங்கத்தின் அறிக்கை தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் பாதிக்கப் பட்ட இணையத் தளங்களுக்குச் செல்லும்போது ‘ஸ்பைஐ’ எனப்படும் இந்த மென்பொருள், அவர்களது கணினிகளை ஊடுருவுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மின் அஞ்சலைப் பயன்படுத்துவதாலோ அல்லது தெரியாத கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதாலோ இந்த மென்பொருள் கணினிகளை ஊடுருவுகிறது.

இந்த மென்பொருளினால் பாதிக்கப்பட்ட கணினிகளைப் பயன்படுத்தும்போது, கீழ்க்கண்ட தகவல் ஆங்கிலத்தில் வரும்: “உங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்து வருகிறோம். தயவு செய்து 1 முதல் 10 நிமிடங்கள் வரை பொறுத்திருக்கவும். நாங்கள் உங்களது தகவல்களைச் சரி பார்க்கும்வரை பக்கத்தை மூடாமல் பொறுமையாக இருங்கள்.”

மேலும் கூடுதலான குறுந் தகவலோ அல்லது ஒருமுறை பயன்படுத்தக் கூடிய மறைச்சொல்லோ முதல் பக்கத்தில் கேட்கப்படும். உண்மையான இணையத் தள வங்கி சேவை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மறைச் சொல்லை இரண்டாம் பக்கத்தில் தான் கேட்கும்.

முதல் பக்கத்தில் கேட்காது என்று இது குறித்து விளக்கிய சங்கம் தெரிவித்தது. மேலும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்காத ஒரு முறை பயன் படுத்தப்படும் மறைச் சொல்லையும் குறுந்தகவல் வழி இந்த மென்பொருள் தெரிவிக்கும்.

முக்கியமாக, வாடிக்கையாளர் கள் தங்களது வங்கிக் கணக்கில் தெரிவிக்காத ஒருவரையும் பணம் பெறக்கூடியவராக குறுந்தகவல் வழி இந்த மென்பொருள் பாதிக்கப்பட்டோருக்குத் தெரிவிக்ககும். அத்துடன் வாடிக்கையாளர் தாங்கள் செய்திராத பணப் பரிமாற்றத்தைச் செய்து விட்டதாகவோ அல்லது செய்யப் போவதாகவோ குறுந்தகவல் செய்தியை பெறலாம்.

இது தொடர்பாக விளக்கிய சங்கம், இத்தகைய சந்தேகத்துக்குரிய தகவல்களை வங்கி இணையப் பக்கத்தில் காண நேர்ந்தால் உடனடியாக அந்தப் பக்கத்தை மூடி விடுமாறு கூறியது. பின்னர் உடனடியாக வங்கியை தொடர்புகொள்ளுமாறும் சங்கம் அறிவுறுத்தியது.

அத்துடன் கிடைக்கப்பெறும் குறுந்தகவல்களைக் கவனமாகப் படிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களைச் சங்கம் கேட்டுக்கொண்டது. மேலும் கணினித் தகவல்களை அழிக்கும் வைரஸ் மென்பொருளை அழிக்கக்கூடிய, ‘ஆண்டிவைரஸ்’ மென்பொருளை வாடிக்கையாளர்கள் தங்களது கணினிகளில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் சங்கம் தெரிவித்தது.

anwar E-mail: anwronline@in.com City: mkr Country: tn49


10/1/2011 7:13:11 PM

E-mail: City: Country:


10/1/2011 6:23:11 PM
Please send your messages to post your messagers here.
info E-mail: info@madukkur.com City: Dubai Country: UAE


3/8/2011 3:21:57 PM
மகளிர் நாள்

இன்றைய உலகில் தினங்களுக்கா பஞ்சம்
மேலை நாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி
அதற்கு தப்பாமல் எல்லா நாடுகளுமே
அதை கொண்டாடி வருகின்றன..

அந்த வகையில் இன்றைய தினமான
நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய வகையில்
ஏதாவது ஒரு பெண் / தோழி
இல்லாமல் இருக்க மாட்டார்கள்..

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு
எனது அலுவலத்தில் புதியதாக ஒரு பெண் வேலைக்கு சேர்க்கப்பட்டாள்.
வந்த இரண்டு மாதங்களில்
கணினியின் முன் அமர்ந்து
கணினியை பார்த்தவாறு வேலை
செய்து கொண்டு இருந்தாள்.
அது இன்று போல
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும்
அந்த அளவுக்கு நமக்கெல்லாம் தெரியாத நாட்கள்..
பின்னர் நாம் அவளிடம் பழகி நல்ல ஒரு நட்பாகி
அவள் என்ன படித்து இருக்கிறாள்,
என்ன வேலை செய்கிறாள்
என தெரிந்த பின் தான்
அந்த தோழியின் திறமைக்கு
நாம் மரியாதை மனதோடு
தெரிவிக்க ஆரம்பித்தோம்.
அவள் படித்து இருந்தது.. computer programmer
அதில் web developer
இனையதளம் வடிவமைத்து
அதை துணிகரமாக வெளியிடுவது...
அந்த நுட்பமான அறிவு தான் brilliance...
நம்மிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி
நம்மையும் படிக்க வைத்தது..
அதன் பின் இனையதளங்களில் இனைந்து
நாமும் பணியாற்றினோம்..
ஏராளனமான கட்டுரைகள் எழுதினோம்.

இன்று மகளிர் தினத்தில்
யாரை என யோசித்தபோது
எனது மனதில் தோன்றியது
அந்த தோழியின் தாக்கம் தாம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn49


3/7/2011 8:50:24 PM
அன்பானவர்களே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

ஊரில் பொழுதுகள் இனிதே
எல்லா புகழும் இறைவனுக்கே!

ஊரில் தேர்தல் பேச்சுக்கள் இருந்தாலும்
இன்னும் தேர்தல் களம் சூடுபிடிக்கவில்லை.

ஊரில் இன்னும் தேர்தலுக்கான
ஆயத்தங்கள் வரவில்லை..
காங்கிரஸ் - திமுக கூட்டனி விரிசலைத் தொடர்ந்து
காங்கிரஸ் தொண்டர்கள் சந்தோசத்தில்..
தனித்து நின்றாலும் பரவாயில்லை.
திமுக கூட்டனி வேண்டாம் என நினைக்கிறார்கள்.
காங்கிரஸ் தனித்து நிற்பதால்
காங்கிரஸ்க்கு எந்த நஷ்டமும் இல்லை...

ஊரில் காலை விடியலில் பனி இருந்தாலும்
பின்னர் வெயிலின் தாக்கம் இருக்கிறது..

தேர்தல் சூடு பிடிக்க பிடிக்க
நமது இனையதளத்தில்
பல சுவையான தேர்தல் செய்திகள்..
தேர்தல் களம் நேர்முக வர்னனை வரும்..
இன்ஷால்லாஹ்...

ஒரு தேர்தல் நகைச்சுவை..
படித்ததில் ரசித்தது..

ஒரு முறை கண்ணதாசனிடம் கலைஞர் கேட்டாரம்..
நீ இந்த முறை எங்கே நிற்கப்போகிறாய் என...
அதற்கு கண்ணதாசன் சொன்னாரம்.. தமிழ் நாட்டில் எங்கே கேட்டாலும் கொடுக்க மாட்டாய்,
அதற்காக பாண்டிச்சேரியில் நிற்கப்போகிறேன் என சொன்னாராம்..
அதற்கு கலைஞர் கிண்டலாக சொன்னாராம்,
பாண்டிச்சேரி போனால்
நீ எங்கே நிற்கப்போகிறாய் என...
...............))))))))

anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


2/16/2011 3:06:32 PM
tea time

அன்பானவர்களே
நலம் நலமறிய பேராவல்

என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

முன்னைவிட அதிக சிங்கப்பூரர்கள் இப்போது மலேசியாவுக்கு மருத்துவச் சோதனை, சிக்£சைக்காகச் செல்கிறார்கள் என்று தெரிகிறது. பணம் மிச்சமாகிறது என்பதே முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைவிட மலேசியா வில் செலவு குறைவு என்று அவர் கள் சொல்கிறார்கள்.

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந் தரவாசிகள் வெளிநாடுகளில் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற மெடிசேவ் கணக் கைப் பயன்படுத்தும் நடைமுறை சென்ற ஆண்டு மே மாதம் முதல் நடப்புக்கு வந்தது.
அந்தத் திட்டத்தில் முதன்முத லாக மலேசியாவில் இருக்கும் 12 மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள் சேர்க்கப்பட்டன.

அவற்றை சிங்கப்பூரைத் தள மாகக் கொண்ட இரண்டு நிறு வனங்கள் நிர்வகித்து நடத்துகின்றன. ஹெல்த் மேனேஜ்மெண்ட் இன்டர்நேஷனல் (எச்எம்ஐ), பார்க்வே ஹோல்டிங்ஸ் ஆகியவை அந்த இரண்டு அமைப்புகள்.

மலேசியாவில் தாங்கள் வழங்கும் மருத்துவச் சேவை குறித்து முன்பைவிட அதிகமானோர் இப் போது விசாரிக்கிறார்கள் என்று இந்த நிறுவனங்கள் தெரிவித்தன.

மலேசியாவில் இருக்கும் தனது மருத்துவமனைகளில் சென்ற 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகை யில், சென்ற மார்ச்முதல் சிகிச்சை பெற்ற சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60% அதிகரித்து உள்ளது என்று எச்எம்ஐ தெரிவித் தது. என்றாலும் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அது தெரி விக்கவில்லை.

காது, மூக்கு, சிகிச்சைக்காக வும் மகப்பேறு, எலும்பு சிகிச்சை, உடல்சோதனை, உள்உறுப்புகள் படமெடுப்பு சோதனை போன்ற பலவகை சிகிச்சைகளை நாடியும் அவர்கள் வருகிறார்கள் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டது
(source;tamilmurasu)

Indian Rupee (INR) 12.27(Dh 81.49/ Rs 1000)
source ; khaleejtimes.



விடுமுறைகள் வந்ததால

இதோ ஏதோச்சையாக
சில பயண விபரங்கள் பார்த்ததில்,
விமான பயண சீட்டுகளின் விலை


jet airways 980.00
emirates 1060.00
indian airlines 1050.00
srilankan airlines no seat
air india express full

anwar E-mail: anwaronline@in.com City: dxb Country: emirates


2/14/2011 1:48:15 PM
Tea Time

ஆத்மார்த்த நட்புகளே!
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

அமீரகத்தில் நல்ல சாரல் காற்று நிலவினாலும்
பனி படரும் இரவுகள் இல்லை எனலாம்.
இன்றும் காற்று வீசும் என வானொலி வார்த்தைகள்.

அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை
அவளுக்கு யாரும் இனை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை


அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும்
அவள் எனது இல்லையே!


என்ட கல்பிலே வெண்னிலாவே
நீ நல்ல பாட்டு தாரான்

உலகமே கலாச்சார சீரழிவில் சென்று கொண்டிருக்க
வெட்கம் அறியாத ஒரு தலைமுறை உருவாக
ஊடகங்கள் அதுக்கு வழி வகுக்கிறது என்றால் மிகையல்ல.
காதலர் தினம் என அதற்கு என சிறப்பு நிகழ்ச்சிகள்
அதற்கென சிறப்பு நேர்கானல்கள்
ஏன் இந்த நமது கலாச்சாரத்திற்கு
ஒவ்வாத கொண்டாட்டங்கள்.
ரோசாப்பூவும், வாழ்த்து அட்டைகளும்,
நினைவில் நிற்க அன்பளிப்புகளும்
பரிமாறுதலில் இருந்தாலும்,
இன்னும் அறுவடைக்கு தயாராக இருக்கும்
தஞ்சை தரணியின் வயல்வெளிகளில் கானும் நெற்கதிர்கள் நாணத்துடன் தலை சாய நிற்பது போல,
இன்னும் அச்சம் ,
நாணத்துடன் அடக்கமாக வாழும்
தமிழ் குடும்பங்களும்
அது செழித்தோங்க பண்பாட்டுகள்
சிதையாமல் இருக்க
கல்லாமல் வரும் ஆச்சாராமான
கலாச்சாரத்துடன் வாழும் மக்கள்
இந்த மண்வெளியில் உலவாமல் இல்லை.
சோசியல் நெட்வொர்க் எனும்
பேஸ்புக்கில் கூட தன் முகம் காட்டாத
நாணத்துடன் வாழும்
தமிழ் சமுதாயம் இருக்கிறது என்றால் மிகையல்ல.
உலகம் கலாச்சார சீரழிவில்
நாகரீக மோகத்தில் சென்றாலும்
விழிப்புணர்வு என்னும்
பிரச்சாரத்தை நாம் செய்வோமாக!

anwar E-mail: anwaronline@in.com City: dxb Country: emirates


2/8/2011 3:47:44 PM
Tea Time...

அன்பானவர்களே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

சில தினங்களுக்கு நமது இனையம் வழியே
இஸ்லாமிய வங்கி அல்லது இஸ்லாமிய முதலீடுகள் குறித்து
நமது இனையத்தில் எழுதி இருந்தோம்..
இதோ எழுதியதில் சில வரிகள்

'உலகமே இஸ்லாமிய வங்கி மற்றும்
இஸ்லாமிய முதலீடுகளில்
திரும்பிக்கொண்டு இருக்கும்போது
நமது ஊரில் உள்ள நல் உள்ளங்கள்
இதற்கான முயற்சிகளில் ஈடுபடுமா?'

இதற்கான முயற்சிகளில் இறங்க
அது சம்பந்தமான ஆர்வப்பட
ஒரு சிலர் தயாராக உள்ளனர்.
சமீபத்தில் நண்பர் ஒருவரை சந்திக்கும்போது
ஊரில் துவங்குவதற்கு எண்ணம் உள்ளதாக சொன்னார்.
எவ்வளவு சந்தோசமான செய்தி..
எல்லா புகழும் இறைவனுக்கே!

மேலும் ஒரு சந்தோசமான செய்தி
கேரளா உயர் நீதிமன்றத்தில் இதற்காக
வழங்கப்பட்ட தீர்ப்பை
அன்றைய நாளேடான ஹிந்துவில் வந்த செய்தி..

http://www.thehindu.com/news/cities/Kochi/article1153953.ece

KOCHI, February 4, 2011

The Kerala High Court on Thursday upheld the State government order giving the Kerala State Industrial Development Corporation (KSIDC) sanction for starting a non-banking finance company based on Islamic principles.

When the KSIDC proposed to run an NBFC in compliance with Shariah laws and the law of the land, it “cannot be condemned as either promoting a religion or aiding a religion,” said a Division Bench of Chief Justice J. Chelameswar and Justice P.R. Ramachandra Menon

The court dismissed writ petitions filed by Janata Party president Subramanian Swamy and another person. Dr. Swami argued that the setting up of a financial service company based on Shariah laws with government participation was against the secular principles. The KSIDC held 11 per cent of the equity.

The government contended that the company, Al Barakh Financial Services Limited, was registered under the Companies Act. A joint venture with big industrialists and enterprises, it would function in accordance with the law of the land, and it was not controlled by the government.

The judges said that under Article 298, if the State government had the freedom or authority to carry on any trade or business or acquire or dispose of property and to enter into a contract, the belief that the State was prohibited from doing any trade or business, either with a religious organisation or an organisation which proposed to carry on a business in a manner compliant with a set of religious beliefs, would be “ inconsistent with the established rules of interpretation of constitutional documents.” The Constitution did not place any “absolute embargo” on the government associating itself with any religious activity.

The petitioners could not demonstrate how the impugned government order had brought about the effect of directly promoting a particular religion, the Bench said

The government's intention was to derive commercial benefits from the venture. Money from the exchequer would be paid to an institution which did not propose to carry on religious activities such as preaching or propagation.

The government's participation in such a joint venture would not have the primary and direct effect of supporting or promoting a particular religion.

Keywords: KSIDC, Sharia law, Shariah-based NBFC

for exchange rates
Indian Rupee (INR) 12.24(Dh 81.69/ Rs 1000)
source ; khaleejtimes

ticket rates
dubai to chennai
emirates 700.00 dhs
jet airways 570.00 dhs
indian airlines 580.00 dhs

dubai to trichy 890.00
via colombo

source ; Bin Subaih Travels
04 - 2353777



anwar E-mail: anwaronline@in.com City: dxb Country: emirates


2/3/2011 6:32:29 PM
Tea Time

ஆத்மார்த்த நட்புகளே
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

தை மாதம் என்பதால்
கொஞ்சம் குளிர் இருந்தாலும்
வெயில் கொஞ்சம் கூடித்தான் இருக்கிறது.

இது போன்ற பருவ நிலையில்
சூடாக அதே இஞ்சி போட்ட ஒரு தேனீர்.
அந்த தேனீர் பருகுவது எப்படி?
சற்றே உடலை வருடும் அந்த இதமான வெப்பத்தில்..
அந்த தேனீரை ரசித்து பருகுவது அலாதி ப்ரியம் தான்.
ஹாஆஆஆஆஆஆஆஆஆ

அலைக்கற்றை விவகாரம்
பூதகரமாக உருவாகி
வங்க கடலில் உருவான புயல் சின்னம் போல்
இப்போது முன்னால் அமைச்சர்
திமுகவின் பதவியில் இருந்து விலகல் வரை...
இது பற்றி விலாவாரியான கட்டுரை விரைவில்.


ஊரில் வாக்காளர் அடையாள அட்டை
விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலரை அனுகி பெற்றுக்கொள்ளவும்.


மூன்று இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம்

சிங்கப்பூர்
தற்போதைய போக்குவரவு சூழ்நிலையை பரிசீலனை செய்த நிலப்போக்குவரவு ஆணையம் இம்முறை மின்னியல் சாலைக் கட்டணத்தில் மாற்றமிருக்காது என்று அறிவித்துள்ளது.
அடுத்த மே மாதம் மீண்டும் போக்குவரவு நெரிசல் பற்றி ஆணையம் ஆய்வு செய்யும்.
இந்நிலையில் மெரினா பேயின் ஒரு பகுதி ஷென்டன் வே-சைனாடவுன் மின்னியல் சாலைக் கட்டணத்திற்குள் கொண்டு வரப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளத.
இந்த நடவடிக்கை மெரினா பே பகுதியில் மேம்படுத்தப்பட்ட மெரினா பே நிதி நிலையங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இடம் பெறுகிறது.
இந்த மாற்றங்களுக்கு ஏதுவாக சென்ட்ரல் பொலிவார்டில் நிறுவப்பட்ட மின்னியல் சாலைக் கட்டண சாவடி அகற்றப்படும்.
சென்ட்ரல் பொலிவார்டு நோக்கி செல்லும் மேக்ஸ்வெல் ரோடு, சென்ட்ரல் பொலிவார்டு பகுதியில் நுழையும் மெரினா ஸ்டேஷன் ரோடு ஆகிய இரு இடங்கள் ஷென்டன் வே-சைனா டவுன் பகுதியின் ஒரு பகுதியாக சாலைக் கட்டணம் செயல் படுத்தப்படும்.
மூன்றாவது சாலைக் கட்டண சாவடி பேபிரண்ட் அவென்யூவில் இடம் பெறுகிறது. இந்த மாற்றங்கள் பிப்ரவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மலேசியாவில் வெள்ளம்:
50,000 பேர் வெளியேற்றம் மலேசியா
ஜோகூர்பாரு: ஜோகூர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக 50, 000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனார். வான¬லைத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த வாரம் முழுவதும் நாட்டின் பல பகுதி யில் மழை நீடிக்கும் என்றும், வார இறுதியில் மழையின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் வெள்ளத்தின் காரணமாக ஜோகூர் பகுதியில் 39, 500 மக்களும், நெகிரி செம்பிலான் பகுதியில் 2,200 மக்களும், மலாக்கா பகுதியில் 1,200 மக்களும், பாகாங் பகுதியிலிருந்து 500 மக்களும் இதுவரை வெளியேற்றப் பட்டுள்ளனர்.
2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் ஏற்ப்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தைவிட இம்முறை ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிக சேதத்தை விளை விக்கும் என்று தான் அச்சம் கொள்வதாக மேன்டெரி பாஸர் டாடுக் அப்துல் ஹாணி ஒத்மான் தெரிவித்தார்.
2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் எற்ப்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் செகாமட் பகுதியை மட்டும் தாக்கிய தாகவும், இம்முறை ஒட்டுமொத்த மாநிலத்தையும் பாதித்துள்ளதாகவும், கடந்த சன¬க்கிழமை முதல் அப்பகுதி யில் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்ட தாகவும் அவர் லாபிஸில் தெரிவித்தார். ஜோகூர் பகுதியில் மெர்சிங் மாவட்டத்தை தவிர அனனத்து மாவட்டங்களிலும் வெள்ள மீட்பு அறைகள் இயக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களில் ஓடும் முக்கிய ஆறுகளில் தண்ணீர் ஆபத்தான அளவை எட்டியுள்ளதாக தேசியப் பேரிடர் குழு தலைவர் ஹாணி தெரிவித்தார்.
லாபிஸ் பகுதிக்கு சென்று அங்குள்ள பலதுறை அரங்குகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மந்திரி புசார் சந்தித்தார். செகாமட் டுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் பாதிப்பு அடைந்ததன் விளை வாக அங்கு எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.
செகாமட் பகுதியில் உள்ள 134 மின் துணை நிலையங்கள் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முடப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் பகுதியில் உள்ள தம்பின், ஜெம்போல், கோலா பில்லா மற்றும் ரெம்பாவ் மாவட்டங்கள் உள்ள மக்கள் அதிக அளவில் அப்புறப்படுத்தபட் டுள்ளனர்.
தம்பின் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுப்பணி துறை அமைச்சரு மான டத்தோ ஷாசிமான் அபு மன்சுர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு 2006ம் ஆண்டை விட அதிகம் என்றார்.
source :tamilmurasu






anwar E-mail: anwaronline@in.com City: dxb Country: emirates


1/27/2011 10:51:12 AM
Tea Time...

அன்பான அனைவருக்கும்
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?


62வது குடியரசு தினத்தில் அடியெடுத்து இருக்கிறோம்.

ஊரில் பொழுதுகள் இனிதே..
குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சிகள்
அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும்,
அமைப்புகள் சார்பாகவும் நடைபெற்றது.

வளர்ந்து வரும் நாடுகளில்,
நல்ல ஒரு எடுத்துக்காட்டாக
இந்தியா மேலோங்கி வருகிறது என்றால் மிகையல்ல.
சமீபத்தில் அமெரிக்கா பாராளுமன்றத்தில் அதிபர் உரையாற்றும்போது
நமது நாட்டை மேற்கோள் காட்டி உரையாற்றியது நமது வளர்ச்சியே...

ஊரில் பகலில் நல்ல வெயில் இருந்தாலும்
இரவு நேரங்களில் நல்ல சாரல் பனி இருக்கிறது.

இதுபோன்ற குளிர்காலங்களில்
சுட்டெரிக்கும் வெயிலை விட இதம் என்றாலும்
நம் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றத்தால்
அன்றாடம் வேலையில் மந்தத்தன்மை,
லேசான மனச்சோர்வு,
மன நிலையில் அடிக்கடி மாற்றம்
இவையெல்லாம் தவிக்கமுடியாதவை.

இன்று காலை கூட இங்கே 19 டிகிரி செல்சியஸ்


செரோடோனின் மூளையில் சுரக்கும்
இந்த ஹார்மோன் தான்
மன நிலையை சீராக வைத்திருக்கவும் செயல்பாடுகளுக்கும்
காரணமாக அமைகிறது.
இது பற்றி விரிவான ஒரு கட்டுரை விரைவில் தருகிறோம்.

உலகமே இஸ்லாமிய வங்கி மற்றும்
இஸ்லாமிய முதலீடுகளில்
திரும்பிக்கொண்டு இருக்கும்போது
நமது ஊரில் உள்ள நல் உள்ளங்கள்
இதற்கான முயற்சிகளில் ஈடுபடுமா?
அதற்கான கட்டமைப்பு பணிகளுக்கு தயாராகுமா?
இதற்கான முயற்சிகளுக்கு
ஒரு அமர்வு ஏற்படுத்துங்கள்
அனைவரும் தேவையில்லை.
ஒரு சிறிய குறிப்பிட்ட சாரார்.
வங்கிகளில் பணிபுரியும் மற்றும் கணக்காளர்கள்.
அதில் இதன் நல்லது கெட்டதை அலசி ஆராயுங்கள்
முடிவுகள் நல்ல மாதிரியாக இருந்தால்
தொடங்குங்கள் இஸ்லாமிய வங்கி முறை
அல்லது இஸ்லாமிய முதலீடுகளை..

நமது அருகாமை நாடான
சிலோனில் கூட இஸ்லாமிய முதலீடு
வங்கி முறை துவங்கி 15க்கும் மேற்பட்ட கிளைகள் ஆகியது.
அதேபோல இந்தியா பங்கு வர்த்தகத்தில்
இஸ்லாமிய பங்குகள் சமீப காலமாக
சக்கைப்போடு போடுவது போதுமானாது.

இது ஒன்றும் இறைப்பணி மட்டுமல்ல
இது உங்கள் முதலீடுக்கு நல்ல ஒரு தொழில்
எல்லா புகழும் இறைவனுக்கே!


anwar E-mail: anwaronline@in.com City: dxb Country: emirates


1/25/2011 10:54:55 AM
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது என்று மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சர் வயலார் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,

தற்போது அமலில் உள்ள சட்டவிதிப்படி வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்டு வைத்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம். இதற்காக அவர்கள் இமெயில் மூலம் வி்ண்ணப்பிக்கலாம். இந்த வாக்காளர்களின அடையாளத்தில் சந்தேகம் ஏற்பட்டால் வழக்கமான முறையில் அரசியல் கட்சிகள் புகார் கொடுக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சட்ட அமைச்சகமும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சகமும் பரிந்துரைத்துள்ளன. தேர்தல் ஆணையம் இது பற்றி பரீசிலித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின் விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

info E-mail: info@madukkur.com City: dxb Country: emirates


1/24/2011 1:36:10 PM
Tea time..

ஆத்மார்த்த நட்புகளே
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

போகுது பொழுதுகள் இனிதே
எல்லா புகழும் இறைவனுக்கே!

மார்கழி முடிந்து தை மாதம்
தை மாதம் தரையெல்லாம் குளிரும் என்பார்கள்.

அமீரகத்தில் மழையும் இருந்தது.
'அவனே மேகத்தில் இருந்து மழையை
பொழியச் செய்து
உயிரிழந்த பூமிக்கு அதைக்கொண்டு
ஜீவன் அளிக்கிறான்'


இறைவன் உதவியால்
ஒரு வாசகர் வட்ட சந்திப்பு
ஆலோசித்து வருகிறோம்.

இதற்காக இடம் தேர்வு மற்றும்
ஆலோசனைகள் நடந்து வருகிறது.
மதுக்கூர் இனையதளம் படிக்கும்
அனைத்து வாசகர்களும்
இதில் கலந்துக்கொள்ள வேண்டும்
என்பது நமது ஆவல்.

இன்றைய உலகில் சமூக வலைத்தளங்கள்
நல்ல ஒரு நட்பு வட்டங்களாக மாறிவரும்போது
அது போல் நமது இனையமும் மாறவேண்டும் என்பது எண்ணம்.
அதே சமயத்தில் ஆக்கப்பூர்வமான பணிகள் செய்ய
இந்த சமூகத்திற்கு நமது இனையமும் இருக்க வேண்டும் என்பது நமது எண்ணம்.
உதாரனமாக சொல்லவேண்டுமானால்,
நமது ஊருக்கு வரும் இரயில்வே துறை முதல்
இன்னும் என்ன என்னமோ அரசின் திட்டங்கள்
நம்மை விட்டு செல்லாமல் இருக்க,
அத்திட்டங்களை கொண்டுவர நல்ல
சமுதாயம் பாடுபட வேண்டும்.
இல்லை என்றால் அவை எல்லாம் நம் முன்னாலேயே
நமது ஊருக்கு வராமல் சென்று விடும்.

நமது வாசகர் வட்டத்திற்கான
இடம் மற்றும் நாள், அறிவிப்புகள்
நமது இனையத்தில் வெளியாகும்.
உங்களுக்கு மின்னஞ்சலிலும் தகவல் தெரிவிக்கப்படும்.


anwar E-mail: anwaronline@in.com City: dxb Country: emirates


1/24/2011 1:02:41 PM
சிங்கப்பூரின் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்க்கைப் பாணி நகர மையம் தெம்பனிசில் இன்னும் சில ஆண்டுகளில் உருவாகிறது.

சமூகம், விளையாட்டு, கலை கலாசாரம், வர்த்தகம் எல்லாவற்றுக்கும் அந்த மையம் ஒரே இடமாகத் திகழும்.

தெம்பனிசில் வசிக்கும் 261,700 மக்கள் நூலகத்துக்குச் செல்ல, இசை நிகழ்ச்சியைச் கண்டுகளிக்க, சாப்பிட, விளையாட, ஒருவரை ஒருவர் சந்தித்து உறவாட விரும்பினால் அந்த மையத்துக்கு சென்றால் போதும்.

அங்கு ஒரே இடத்தில் எல்லா வசதிகளும் இருக்கும். தெம்பனிஸ் நகர மையம் என்று குறிப்பிடப்படும் அந்த மையம், 2015ல் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வளர்ச்சி அமைச்சரும் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மா போ டான் நேற்று 2011- 2015 தெம்பனிஸ் பெருந்திட்டத்தை அறிவித்தார். அதில் இந்த மையமும் ஒன்று. அந்த உத்தேச மையம் 5.7 ஹெக்டேர் நிலப்பரப்பில் - அதாவது சுமார் ஏழு காற்பந்து திடல் அளவு உள்ள நிலத்தில் கட்டப்படும்.

வழக்கமான சமுக மன்றத்தைப் போல் 12 முதல் 15 மடங்கு பெரியதாகப் புதிய மையம் இருக்கும்.
தெம்பனிஸ் விளையாட்டு அரங்கம், விளையாட்டுக்கூடம் இரண்டும் அகன்று புதிய மையம் அமையும்.

தெம்பனிஸ் வட்டார நூலகம், வடக்கு கிழக்குநகர மேம்பாட்டு மன்றம், நகர மன்றம், வீடமைப்பு வளச்சிக் கழக கிளை அலுவலகம் எல்லாம் அந்தப் புதிய மையத்துக்கு இடமாறும்.

அவற்றோடு, உணவு பானக் கடைகள், சில்லறை வர்த்தகக் கடைகள், மேடைக்கலை நிலையங் கள், சமூக மன்றம் எல்லாம் புதிய மையத்தில் இருக்கும்.

இவற்றோடு காற்பந்து, பேட்மிண்டன், டென்னிஸ் விளையாட்டு போன்ற குறிப்பிட்ட பொழுதுபோக்கு வசதிகளும் அங்கு அமைந்து இருக்கும்.¯

தெம்பனிஸ் நகர மையத்தில் எல்லாருக்கும் பயனுள்ள மத்திய இடத்தைத் தான் கருத்தில் கொண்டுள்ளதாக அமைச்சர் திரு மா தெரிவித்தார்.

“மக்கள் தாங்கள் நினைத்தபடி சுதந்திரமாக வந்துசெல்லும் பழைய சமூக நிலையக் கோட்பாட்டு அடிப்படையில் புதிய மையத்துக்கான யோசனை தோன்றியது.

“ஆனால் இன்றைய உலகில் பல்வேறுபட்ட விருப்பங்கள், அவாக்கள் இருக்கின்றன.

மக்கள் வேறுபட்ட பற்பல இடங்களுக்குச் செல்கிறார்கள். புதிய நகர மையம் அமையும்போது மக்கள் மறுபடியும் ஒன்று கூடுவதைக் காண முடியும் என்பதே நம் பிக்கை,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.



இந்தியர்களுக்காக 8 நாள் பதிவு இயக்கம்


பிறப்பு பத்திரம், குடியுரிமை, அடையாள அட்டை இல்லாத இந்தியர்கள் வரும் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி எட்டு தினங்களுக்கு நடைபெறும் 'மை டப்தார்' எனும் பதிவு பிரச்சாரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மலேசிய குடிநுழைவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த பதிவு இயக்கம் வெற்ற பெற நாட்டில் உள்ள இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கள் தக்க உதவிகள் செய்ய வேண்டும் என்று குடிநுழைவுத் துறையின் துணைத் தலைமை செயலாளர் டத்தோ அஸ்ஹார் ராஜா அப்துல் மானாப் கூறினார்.

கெடா, பினாங், பேராக், சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இந்த பதிவு நடவடிக்கை நடைபெறும் என்று அவர் சொன்னார்.

மேலும், இந்திய சமுதாயத்தில் இன்னும் எத்தனை பேருக்கு இத்தகைய அதிகாரபூர்வ ஆவணங்கள் இல்லை என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், இவை இல்லாத அனைவருக்கும் அதை வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஆனால், அவர்கள் பதிவு செய்ய முன்வர வேண்டும். இந்த பதிவு காலத்திற்கு பிறகு பதிவு செய்ய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.


மோனாலிசா ஓவியப் பின்னணி : புதிய தகவல்

இத்தாலியின் புகழ்பெற்ற லியானார்டோ டாவின்சியின் பிரபலமான மோனாலிசா ஓவியத்தைப் பற்றி, அந்த ஓவியத்துக்கு யார் "மாடலாக' இருந்தனர், ஓவியத்தின் பின்னணிக் காட்சிகள் கற்பனையா உண்மையா என்பன போன்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. லியானார்டோ டாவின்சி வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர். இவரது ஓவியங்களுள் இன்று வரை சாகா வரம் பெற்றது, மோனாலிசா ஓவியம். இப்படத்தில் லிசாவின் பின்னணியில் ஒரு பாலம் மற்றும் சாலை மங்கலாகக் காட்டப்பட்டிருக்கும்.
இந்த ஓவியத்தைப் பற்றி இதுவரை பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் லிசாவைப் பற்றி மட்டுமே ஆய்வு செய்தவை. அவரின் பின்னணியில் உள்ளதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலமும் சாலையும் டாவின்சியின் கற்பனைச் சித்திரங்கள் என்றே பலரும் கருதி வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து கர்லா க்ளோரி என்பவர் விரிவான ஆய்வுகளைச் செய்தார். பொதுவாக, மோனாலிசா ஓவியத்துக்காக, இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் வாழ்ந்த லிசா டெல் ஜியோகாண்டோ என்ற பெண்ணைத் தான் டாவின்சி "மாடலாக' பயன்படுத்தினார் என்று நம்பப்படுகிறது.ஆனால் 15ம் நூற்றாண்டில், இத்தாலியின் மிலன் நகரத்து இளவரசியாக இருந்த பியங்கா கியோவன்னா போர்சா என்ற பெண்ணையே டாவின்சி, தனது ஓவியத்துக்கான "மாடலாக' பயன்படுத்தியுள்ளார் என்று கர்லா தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டிருந்த போதுதான், லிசாவின் பின்னணியில் உள்ள காட்சிகள், இத்தாலியின் வடபகுதியில் உள்ள போபியோ என்ற சிறு நகரத்தில் உள்ளன என்பதையும் கண்டறிந்தார். அந்நகரத்தின் மத்தியில் உள்ள அரண்மனை ஜன்னல் வழியாகப் பார்த்தால் லிசாவின் பின்னணிக் காட்சிகள் அப்படியே தெரிவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது ஆய்வு உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றும் அந்நகரத்தில் லிசாவின் பின்னணியில் தெரியும் பாலம் ஒன்று உள்ளது.

info E-mail: info@madukkur.com City: dxb Country: emirates


1/16/2011 12:47:32 PM
'செந்நெல் மாற்றிய சோறும்,
அநெய் தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை,
கட்டித் தயிரோடு மிளகின் சாறும்,
கானில் நன்மதுரம் செய் கிழங்கும்,
நாவில் இனித்திடும் அப்பமும்
நம் எல்லாரையும் நலமுடன் வளர்ப்பன..'

அனைவருக்கும்
இந்த நன்னாளில்
பொங்கும் நல்வாழ்த்துக்கள்.


பொங்கல் திருவிழா.


பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோலமிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திருவிளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, முதலில் சாணப்பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறிவகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய்ப்பல் சேர்த்து தயாரிக்கும் காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளவும். பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். ஒரு தேங்காயை உடைத்து அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம். கிடைக்காதவர்கள் சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம். கூடுமானவரை மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும். காய்ந்த விறகுகளைத் தேர்ந்தெடுங்கள். பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றவும். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியஉடன், குலவையிடுங்கள். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல்' என்று முழங்கலாம். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி சமைக்க இருக்கிறோமோ அந்தளவுக்கு முகர்ந்து எடுத்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.

பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள்.


info E-mail: a1@madukkur.com City: dxb Country: emirates


1/15/2011 1:09:13 PM
'செந்நெல் மாற்றிய சோறும்,
அநெய் தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை,
கட்டித் தயிரோடு மிளகின் சாறும்,
கானில் நன்மதுரம் செய் கிழங்கும்,
நாவில் இனித்திடும் அப்பமும்
நம் எல்லாரையும் நலமுடன் வளர்ப்பன..'

அனைவருக்கும்
இந்த நன்னாளில்
பொங்கும் நல்வாழ்த்துக்கள்
info E-mail: a1@madukkur.com City: dxb Country: emirates


1/12/2011 12:13:07 PM
நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களம் இறக்குகிறது அதிமுக.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனக்குச் சாதகமான முறையில் அனைத்தையும் மாற்றும் வேலையில் படு மும்முரமாக, கில்லாடித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அத்தனை பேரும் கூட்டணி குறித்து கவலையில் உள்ள நிலையில் இவர், கூட்டணியைத் தாண்டி வேறு பல முக்கிய விஷயங்களையும் கவனத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகிறார்.

ஜாதி ரீதியாக, உணர்வு ரீதியாக திமுகவுக்கு எதிராக உள்ளவற்றை ஒருங்கிணைத்து தன் பக்கம் திருப்ப முயன்று வருகிறார் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் சீமானை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக திருப்பியது.

ஈழத்தில் நடந்த மகா அக்கிரமமான போர், ஈழப் போர் கோரமாக முடிந்த அவலம் உள்ளிட்டவற்றில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவி வருவதை உணர்ந்த ஜெயலலிதா இப்போது அத்தனையையும் ஒரே வடிகாலாக்கி, அதிமுக பக்கம் திருப்ப முனைந்துள்ளார் சீமான் மூலமாக.

இந்தப் பணியை ஜெயலலிதாவுக்காக வைகோ செய்து முடித்துள்ளார். வருகிற சட்டசபைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக சீமானை பொது வேட்பாளராக்கப் போகிறது அதிமுக. நாம் தமிழர் கட்சி சார்பாகவே இத்தேர்தலில் போட்டியிடப் போகிறார் சீமான். அவருக்கு அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அதிமுக கூட்டணி ஆதரவு அளிக்கும்.

இந்தத் திட்டத்திற்கு சீமானும் சம்மதித்து விட்டார். இதை நேற்று வைகோவை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் சீமானே தெரிவித்தார். தான் தேர்தலில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்தார்.

இதற்கிடையே முதல்வருக்கு எதிராக சீமானை நிறுத்த வேண்டும் என்ற கருத்து நேற்று பகிரங்கமாகவே ஒரு அரங்கில் வைக்கப்பட்டது. தமிழறிஞரும், ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கேவலமான செயல்பாடுகளை பகிரங்கமாக கண்டித்து அக்கட்சியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறியவருமான தமிழருவி மணியன் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்த விழாவின்போது முதல்வருக்கு எதிராக சீமானை பொது வேட்பாளராக்க வேண்டும் என்ற கருத்து பலமாக வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன், நடிகர்கள் நாசர், மணிவண்ணன் மற்றும் சீமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் மல்லை சத்யாகலந்து கொண்டார். திமுகவுடன் நெருங்கி வந்து கொண்டிருப்பதால் ஈழ விவகாரம் குறித்து இப்போதெல்லாம் ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கும் பாமக சார்பிலும் ஒருவர் கலந்து கொண்டார். அவர் எம்.எல்.ஏ. வேலுச்சாமி.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் (பாமகவைத் தவிர) திமுக, காங்கிரஸ் கூட்டணிய வேரறுக்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினர். ஒருவர் பாமகவைக் கண்டித்துப் பேசியதால் சலசலப்பும் ஏற்பட்டது.

இலங்கை இன அழிப்புப்போர் குறித்த 300 புகைப்படங்களுடன் கூடிய அரிய தொகுப்பாக என்ன செய்ய வேண்டும் இதற்காக என்ற இந்த நூல்

உருவாகியுள்ளது.

மொத்தத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர்களின் கோபத்தையும், குமுறலையும் சீமான் பக்கம் திருப்பி அவரை வெற்றி பெற வைத்து முதல்வர் கருணாநிதியை வீழ்த்த அதிமுக வகுத்துள்ள வியூகம் தெளிவாகியுள்ளது.
(source :vanakkammalysia)
anwar E-mail: anwaronline@in.com City: dubai Country: emirates


1/12/2011 12:08:20 PM
Tea Time

ஆத்மார்த்த நட்புகளே
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

2010 இப்பத்தான் வந்த மாதிரி இருந்துச்சி அதற்குள்ளே எப்படி போனது எனத்தெரியலை?!
2011 வந்து ஒரு வாரம் ஆகப்போகுது..
நமது வாழ்னாளில் இப்படி போகுது பொழுதுக

சென்ற வருடம் பார்த்தோமானால்
உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை இருந்தாலும்
நம்ம இந்தியாவில் ஒன்னும் அப்படி இல்லை.
நல்ல முறையில் செழித்தோங்குகிறது..
ஊழல் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் அல்ல..
எல்லாம் கோடியில் தான்
படித்தவர்கள் முதல் பாமர மக்கள்வரை
அனைவரும் பேசுவது அதைத்தான்.
ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய்
இதற்கு எத்தனை பூஜ்யம் என தெரியலை...)))))
brain in india come from south.....j/k
ha haaha........

ஊரில் இந்த வருடம் ஆகஸ்ட் தொடங்கிய மழை
டிஸம்பர் இறுதிவரை தனது கருனையை பாசத்தை
நமது ஊரின் மீது காட்டியது..
எல்லா புகழும் இறைவனுக்கே!

இப்போது செல்வது மார்கழி மாதம்
மார்கழி திங்கள் சொல்லவேண்டியதில்லை..
கூதலான மார்காழியும் நீளமான ராத்திரியும்..
நல்ல குளிர்தான் இரவு நேரங்களில்..

மார்கழி என்றாலே சங்கீத கச்சேரிகள் தானே..
நல்ல கட்டுரை ஒன்று விரைவில் எழுதுகிறேன்..

anwar E-mail: anwaronline@in.com City: dxb Country: emirates


1/6/2011 2:14:56 PM
நாடு முழுவதும் உள்ள 800 தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி ஏற்படுத்த தபால் துறை தி்ட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

மக்களிடம் நம்பிக்கை பெற்ற தபால்துறை வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தங்க விற்பனை, மியூச்சுவல் பண்ட்,இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சரக்கு போக்குவரத்திலும் மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டிற்கே வந்து பொருட்களை எடுத்துச் சென்று டோர் டெலிவரி கொடுக்கும் வசதியும் உள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தபால்துறை தற்போது ஏடிஎம் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கதிட்டமிட்டுள்ளது.

மேலும் தபால் நிலையங்கள் ஏற்கனவே கம்யூட்டர் மயமாகி விட்டன. இதன் மூலம் ஊழியர்களுக்கு வேலை பளு குறைந்ததுடன் வாடிக்கையாளர்களுக்கும் துரித சேவை கிடைத்து வருகிறது.

சேமிப்பு கணக்கில் நாட்டிலேயே முதல் இடத்தை தபால் துறை வகித்து வருவதாக தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கியில் உள்ளது போல் தபால் நிலையங்களிலும் ஏடிஎம் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டு அதற்கான முற்சியில் இறங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இந்தாண்டின் இறுதிக்குள் புதிய நகை தொழிற்சாலையை அமைக்க உள்ளது என அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெட்டா நகரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 500 முதல் 800 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். சவுதியில் அமைய உள்ள தொழிற்சாலை நிறுவனம் ஏற்கனவே தங்க நகை தொழிலில் சுமார் 25 வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. அரபு நாடுகளிலேயே சவுதி அரேபியா மட்டுமே உலகளவில் அதிகளவு தங்கத்தை விரும்பும் நாடுகளின்வரிசையில் 16-வது இடத்தை பிடித்துள்ளது.மேலும் அன்னியச்செலாவணிக்கு ஈடாக 323 டன் தங்கத்தை வைத்துள்ள நான்காவது நாடாக உள்ளது.

anwar E-mail: anwaronline@in.com City: dxb Country: emirates


12/27/2010 4:02:37 PM

ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மாணவி ஒருவரின் உடல் இன்று காலை கரை ஒதுங்கியது. பெரிய பட்டணம் கிராமத்தில் 10 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா பகுதியில் வாழைத்தீவு, குருசடை தீவு, அப்பா தீவு உள்பட 20-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. மத்திய அரசின் உயிர்கோள காப்பக அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் பவளப்பாறைகள் அதிகம் உள்ளதால் மீனவர்கள் செல்லவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தீவு பகுதிகளுக்கு கடல் சார்ந்த ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே உரிய அனுமதியுடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். அனுமதியின்றி செல்வோர்களை கண்காணிக்க ரோந்து படையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் அதையும் மீறி பலர் மேற்கண்ட தீவுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள்.

இந்தநிலையில்தான் நேற்று காலை ராமநாதபுரத்தை அடுத்த கடற்கரை கிராமமான பெரிய பட்டணத்தில் இருந்து 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளில் 40-க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக அப்பா தீவு பகுதிக்கு புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் மற்றும் தீவில் சமைத்து சாப்பிட தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். மற்றொரு படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் சென்றனர்.

தீவுக்கு அருகாமையில் சென்றபோது பெண்கள் பயணித்த படகு பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக சாய்ந்து கடலில் மூழ்கியது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அவர்கள் பெயர், விபரம் வருமாறு:-

1.பரக்கத் நிஷா (வயது 36).

2.நாதிராபானு (7). இவர் பரக்கத் நிஷாவின் மகள் ஆவார்.

3.ஹபீப்நிஷா (38).

4.பர்தூஸ்பானு (40).

5.அப்துல்வகாப் (14), இவர் பர்தூசின் மகன் ஆவார்.

6.கலீல்ரகுமான் (12).

7.அர்சுதா (15).

8.மரடியா (45).

9.சலீமாபீவி (48).

10.பாத்திமா பர்சானா (35).

11.அலிமுத்துபீவி (45).

12.மகுபியா (16).

13.முஸ்புலிகா (12).

இதில் சீனி உருதுவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 7 பேர் ஆவார்கள். இவர்கள் தவிர முகமது ஹம்தாம் என்ற 7 மாத குழந்தை உள்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே அதே படகில் பயணம் செய்த சீனி முகமதுவின் மகள் நஜீயா (18), முகமது பாத்திமா மகள் ரஹீமா (13) ஆகிய இருவரின் கதி என்ன ஆனது? என்று தெரியாமல் இருந்தது. இதுபற்றி அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர். எனவே படகில் பயணம் செய்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து விபத்து ஏற்பட்ட கடல் பகுதியில் நேற்று இரவு முழுவதும் கடலோர காவல்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் இன்று காலை முல்லை தீவின் வடபாக கடற்கரையில் ரஹீமாவின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. பெரியபட்டணத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த ரஹீமா நேற்று விடுமுறை தினத்தையொட்டி உறவினர்களுடன் படகில் தீவுக்கு சென்றுள்ளார். அதே படகில் பயணம் செய்து மாயமான நஜியாவும் இறந்திருக்கலாம் எனவும் அவரது உடல் விரைவில் மீட்கப்படும் என்றும் கடலோர காவல்படையினர் தெரிவித்தனர். இதன் மூலம் படகு விபத்தில் பலியான வர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து நடந்த கடல் பகுதியில் சுற்றுலா சென்ற வர்கள் கொண்டு சென்ற சமையல் பொருட்கள் மற்றும் உடைகள் மிதந்தவாறு கிடக்கின்றன. அந்த இடத்தை அடையாளமாக வைத்துக் கொண்டுதான் கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படையினர் உடல்களை கண்டுபிடித்து மீட்டனர். அத்துடன் அதே இடத்தில் சுமார் 100 மீட்டர் ஆழத்துக்கு மூழ்கி கிடந்த படகையும் ஜி.பி.எஸ்.கருவி மூலம் கயிறு கட்டி மேலே இழுத்து வந்தனர்.

விபத்தில் பலியானவர்களில் 10 பேர் பெரிய பட்டணத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் உடல் நேற்று இரவே அங்கு அடக்கம் செய்யப்பட்டது. 2 பேரின் உடல்கள் பரமக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது. மற்றொருவரின் உடல் வெளிநாட்டில் வசித்து வரும் அவரது கணவரின் வருகைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. 15 பேரை பலி கொண்ட படகு விபத்தால் பெரியபட்டிணம் கிராமம் சோகத்தில் இருந்து மீளாமலேயே உள்ளது.
(source:maalaimalar)




anwar E-mail: anwaronline@in.com City: dubai Country: emirates


12/21/2010 1:04:34 PM
Tea Time...

ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
எப்படி போகுது பொழுதுகள்?

'Life is like a ice cream
if we taste (or) waste that will be melt.
so, better taste.'

ஊரில் பெய்த பெய்யும் அடமழையை
ஒரு கட்டுரையில் தனியாக வரையலாம் என்றாலும்
சொல்லப்போனால், அதிக சேதம் இல்லாத
நல்ல ஒரு மழையாக அது அமைந்தது என்றால் மிகையல்ல.

'கார்த்திகை மாதம்
கலம்கழுவ கூட விடாது' என்பார்கள்

எத்தனையோ வருடங்களுக்கு பிறகு
தொடரும் அடமழை..
மேலை நாடுகளில் இது போன்ற
மழை நாட்களில் செய்யும் விவசாயத்திற்கு
ஒரு சொல் சொல்வார்கள்

'it is a gamble in the monsoon'

ஊரில் புதிய சாலைகள் பல இடங்களிலும்
சில இடங்களில் சிமென்ட் சாலைகளும் உண்டு
இதற்காக நம்ம பேரூராட்சிக்கு ஒரு நன்றி சொல்லலாம்.


கவிதை படிப்பவர்களுக்கு
ஆங்கிலத்தில் சுதந்திர இந்தியாவிற்கு முன்
நமது இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள்
ஒரு தொகுப்பாக சமீபத்தில் வெளி வந்துள்ளது.
கவிதை புத்தகத்தின் பெயர்
'early indian poetry in english'
author eunice de souza
year 1829 to 1947.
wowwww.. great collections...

சமீபத்தில் காமன்வெல்த் போட்டிகளில்
தங்க பதக்கம் வென்ற பின்
நம்ம இந்தியவீராங்கனை
சாய்னா சொன்னது என்ன தெரியுமா?

''i won the gold b'coz
i did not repeat my mistakes'

brilliance...

நம்மில் பலரையும் சிந்திக்க வைக்கும்
நல்ல ஒரு சொல்லாகும்
anwar E-mail: anwaronline@in.com City: dubai Country: emirates


12/15/2010 11:52:08 AM
MADUKKUR MAIN 14/12/2010
MADUKKUR BRANCH
THANJAVUR DISTRICT

TO
,

Dear NRI Customer

Sub: NRI CUSTOMERS MEET AT OUR BRANCH AT MADUUKUR
ON 16.12.2010
==========================

Since we are going to conduct an NRI customers meet at our branch on 16.12.2010 at 03.30 p.m.
we invite you to attend with your valuable suggestions
We request you to advise your family members/friends to attend the meeting
on your behalf since you may not be in a position to attend

We expecting your cooperation to make this meeting as grand success.

With regards

CHIEF MANGER
info E-mail: info@madukkur.com City: Dubai Country: UAE


12/5/2010 11:38:13 AM
தொடரும் நமதூரில் மழை

முதல் தினம் பதிவான மழையின் அளவு 82.2 மி.மீ
நேற்று பதிவான மழையின் அளவு 37.2 மி.மீ

இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
நல்ல குளிர் நிலவுகிறது.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


12/3/2010 8:16:00 PM
Tea Time..

அன்பானவர்களே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால்
நமதூர் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால்
நமதூரில் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

நேற்று இரவு தொடங்கிய மழை இன்னும் விடவில்லை.
இதனால் பல குடிசை வாழ் மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் தினமும் தனது அலுவல்களை செய்கின்றனர்.
இன்று கனரக இயந்திரம் வந்தது.
பல இடங்களிலும் உள்ள தண்ணீரை ஓட விட வழி ஏற்பாடு செய்தது.
தர்ஹா எதிரே தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
நமது ஊரின் காட்டாறான,
பாட்டுவனாச்சியில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது.
இது வரை நமதூரில் போக்குவரத்து பாதிப்பில்லை..
ஆனால் மழை இதுவரை விடவில்லை..
பல வடிகால்களிலும் தண்ணீர் ஓட தடையாக இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
ஊரில் மக்கள் குடையுடன் தான் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.
பள்ளிகள் தொடர் விடுமுறையில்...
ஊரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை.
மக்கள் தனது முக்கிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகின்றனர்.


anwar E-mail: anwaronline City: mkr Country: tn


12/3/2010 9:42:40 AM
3-12-2010: மதுக்கூரில் இரவு முழுவதும் கொட்டியது மழை. மதுக்கூரில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இரவு பெய்த மழை அளவு 30 மீ.மீ.
info E-mail: info@madukkur.com City: Madukkur Country: India


11/26/2010 8:18:36 PM
Tea Time...

அன்பானவர்களே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

ஊரில் கடந்த இரண்டு நாட்களாக
நல்ல மழை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இப்போது நல்ல குளிரும் நிலவுகிறது.
பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
பள்ளிகள் மூன்று நாட்களுக்கு இன்று முதல் விடுமுறை.

இதுபோன்ற மழை நாட்களில் குளிப்பது கொஞ்சம் சிரமம் தான்
ஆனால், வெண்ணீரில் குளித்தால்.............
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
குளிப்பதில் ஒரு சுகம்
அடமழை அடித்து நொறுக்கும்போது
நீர் நிலைகளில் குளிப்பது ஒரு சுகம் தான்.

உலகிலேயே பெரிய அரண்மனை
இஸ்தானா நூருல் இமான் தான்
இருப்பது புருனையில்.
ரூபாய் 6300 கோடி செலவில் கட்டப்பட்டது.
மேற்கூரை தங்கத்தால் ஆனது.
மொத்தம் 1788 அறை, 257 குளியலறை
564 கோபுர விளக்குகள், 51 ஆயிரம் பல்புகள்
18 எலிவேட்டர்ஸ், 5 நீச்சல் குளங்கள், 110 கார் நிறுத்துமிடம்
ஒரே இடத்தில் 4000பேர் அமர்ந்து சாப்பிட வசதி.
இந்த அரண்மனை உள்ளே 1500 தொழ வசதியான ஒரு மசூதி.
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


11/3/2010 11:42:11 AM
Tea Time...

ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய
என்ன சேதி
எப்படி இருக்கீங்க

ஊரில் அனைவரும் நலம்
அதிக வெப்பமுமில்லை
அதே சமயம் மழையுமில்லை
வானத்தில் முகிலினங்கள்

தீபாவளி நேரம் என்பதால்
கடைவீதிகளில் ஒரு பரபரப்பு
வியாபாரமும் நடைபெறுகிறது.
பல கிராமத்து மக்களும் வந்து செல்கின்றனர்.
பட்டாசு கடைகளும் தயாராக விற்பனைக்கு இருக்கின்றன.

ஒரு அழகிய தீவைப்பார்ப்போம்.
சில வருடங்களுக்கு முன்பு எதார்த்தமாக
ஒருவரை சந்தித்து உரையாடும் போது
அவரிடம் எங்கே இருக்கிறீர்கள் என கேட்டபோது
அவர் சொன்னார் நான் மால்டாவில் இருக்கிறேன்.
ஓஹ் மால்டாவா? வேலட்டா.. என்று
ஊர் எப்படி, எப்படி பொழுதுகள் செல்கிறது
என சாதாரன கடலையில்..
சில தினங்களுக்கு முன் மால்டாவை தொலைக்காட்சியில் பார்த்தபோது
என்ன சுத்தமான அழகான ஊர்..
நல்ல ஒரு அழகான தீவு..
இறைவனின் படைப்பில் எத்தனை ரசனை.. எத்தனை அழகு

இதோ மால்டாவைப்பற்றி சில செய்திகள்
மால்ட்டா அல்லது மோல்ட்டா (Malta)
தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள உள்ள ஒரு மக்கள் தொகை அடர்த்தி கூடிய ஒரு தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.[1] இதன் உத்தியோகபூர்வ மொழிகளாக மால்ட்டீஸ் மொழியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. ரோமன் கத்தோலிக்கம் இங்கு பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் மதமாகும்.

மொத்த பரப்பளவு 316 கி.மீ.
மக்கள் தொகை சுமார் நான்கு இலட்சம்
பேசும் மொழி மால்ட்டீஸ் மொழி, ஆங்கிலம்
இந்தியர்கள் இல்லாத இடமா?
அங்கேயும் நம்ம மக்கள் இருக்கிறார்கள்
நமது இந்திய உணவகம் ஒன்றும் இருந்தது
இப்போது உள்ளதா எனத்தெரியவில்லை
உணவகத்தின் பெயர் krishnakevin restaurant'
more details
plz visit
http://www.visitmalta.com



anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/28/2010 11:46:16 AM
சமீபத்தில் நமது நாட்டுக்கு ஒரு அங்கீகாரம்
அது என்ன என்றால் ஐக்கிய நாடுகள் சபையில்
உரிய மரியாதை கிடைத்தது தான்...
அதில் அங்கம் வகிக்கும் மொத்த நாடுகளில்
ஐந்து நாடுகளை தவிர மீதம் உள்ள 185 நாடுகள்
நமக்கு ஆதரவாக வாக்கு அளித்தன..
என்பது சந்தோசமான செய்தி..
ஆனால் வளர்ந்து வரும் நாடான நம்ம நாடு
அதில் அங்கம் வகித்து பாராட்டு பெறுவதை விட
நம்ம பிராந்தியத்தில் அதாவது ஆசிய நாடுகளில்
நன்னடத்தைகளை பேணி,
நல்ல செயல்கள் செய்து,
தொழில், கல்வி, மருத்துவம், பாதுகாப்பு போன்றவைகளில் ஈடுபட்டு நல்ல ஒரு நாடாக இந்தியா விளங்குவது தான் சிறந்தது.

ஐ. நா. சபையில் அமர்ந்து இருந்தாலும்
அங்கே நடக்கும் அத்து மீறல்களை இந்தியா கண்டிக்குமா?
சில அங்கிகாரங்களுக்கு எதிர்ப்பு கொடுக்குமா?
முடியவே முடியாது..
அமெரிக்காவின் ஆதிக்கம் தான் அங்கே.
உலகுக்கு பாடம் சொன்னது சமீபத்தில் 'சிலி' தான்
சுரங்கத்தில் சிக்கிய அந்த உயிர்களை காப்பாற்றியது
அவர்கள் கதை முடிந்து விட்டது என
அங்கே சிலர் முடிவு எடுக்க
ஒருவர் மட்டும் முயற்சி எடுத்து
அவர்கள் உயிருடன் வாழ்கிறார்கள்
என்று தெரிந்து அந்த உயிர்களை மீட்டெடுத்து
உலகுக்கு மனித உயிர்களை
இப்படி தான் காப்பாற்ற வேண்டும் என உணர்த்தி
மனித நேயத்தை வலியுறுத்தியதை
நம்ம இந்தியாவும் பின்பற்றுமா?
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/24/2010 8:26:46 PM
Tea Time

'Defeat the defect, before
the defect defeats U'

ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

நமது இனையத்தின் வாசகர் வட்டம் சந்திப்பு
விரைவில் நடத்துவோம்..
அதற்காக ஆலோசனை செய்து திகதியை அறிவிப்பு செய்வோம்.
ஆனால், இன்றுவரை அமீரகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
நாம் அமர்ந்து இனிதே உறவாட நல்ல பருவ நிலையும் வேண்டுமல்லவா?!

சில தினங்களுக்கு முன் மன்னையிலிருந்து பட்டுக்கோட்டை செல்வதற்காக
முக்கூட்டுச்சாலை சந்திப்பில் வந்த ஒரு தனியார் பேருந்து தனது கட்டுப்ப்பாட்டை இழந்து
மோதியது.. இதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்தது
ஆக கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் நல்ல மழை.

சமீபத்தில் வந்த ரசிக்கதக்க ஒரு குறுஞ்செய்தி
sms panna 10 benifit kidaikkum
1) mobile thuru pidikkathu
2) time passa aagum
3) padippavar happy aavanga
4) contact irukkum
5)any time busy ayiduveenga?!
6)somberiya irukka mattinga
7)fingers activa irukkum
8) ABCD marakka mattinga
9) creativity mind irukkum
10) ungala yarum kanjannu solla mattanga?
ha ha aha............)))) funny guys



anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/18/2010 11:07:33 PM
அன்பான ஆசிரிய, வாசக பெருமக்களே
நமது இணைய தள வாசகர் வட்ட சந்திப்பு நடந்து
ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டதாக எண்ணுகிறேன்.
எனவே வரும் (ஹஜ் பெருநாள்) விடுமுறை தினங்களில் (அ) வேறு ஏதேனும் விடுமறை தினத்தில்
ஒரு நாள் முடிவுசெய்து நமது எண்ணங்களை புதுப்பித்து
கொள்ளலாம் என எண்ணுகிறேன். எனவே இணைய குழு ஆலோசித்து (வாசகர்கள் ஆலோசனைகளை பெற்று)
இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடலாமே.
--மதுக்கூர்தாசன்
(என்னுடைய கருத்துக்கள் இனி இந்த புனைபெயரில் வெளிவரும்).
Mohamed Ahamed Dubai, U.A.E.
Mohamed Ahamed E-mail: madukkurdasan1@yahoo.com City: Dubai Country: UAE


10/16/2010 8:22:10 PM
சிவகங்கை பூங்கா

சமீபத்தில் அலுவல் நிமித்தமாக தஞ்சை சென்றபோது
ஒருவரை பார்க்க மாலை ஐந்து மணி ஆகும் என்ற நிலை
நாம் என்ன செய்வது, தியேட்டர் பக்கம் போவதும் கிடையாது,
சரி என நானும் எனது நண்பரும் மதிய உணவை முடித்துக்கொண்டு
சைவ உணவு தான், ஆனால், வத்தல்குழம்பு வைக்க நாம தான் சொல்லி கொடுக்கனும்
ம்ம்ம்ம்ம்...

சரி என பூங்கா செல்லலாம் என சிவகங்கை பூங்கா சென்றோம்,
நல்ல இதமான தட்பவெப்பம்,
ஆனால் அந்த அளவுக்கு பூங்காற்று இல்லை,
அன்று விடுமுறை தினம் இல்லை,
ஆனால் பூங்கா நிறைய மக்கள்,
இப்போ தான் தெரியுது அவ்வளவு பேருக்கும்
வேலை இல்லை என,
பூங்கா சுத்தமாக நல்லா அழகாக இருக்கு,,
கூண்டுக்குள் புறா, எலி எல்லாம் இருக்கு.
யேய் மக்கா? அதை சும்மா விட்டா கூட வெளியே போவாது?
தொடர்வண்டி, படகு குழாம், நீச்சல் குளம் ,
தொங்குபாலம், இத்துடன் பண்பலை ஒளிபரப்பு
என எல்லாம் இருக்கு.. மற்றவைகளுக்கு தனித்தனி கட்டணம்.
கல்லூரி படிக்கும் பெண்கள் கூட்டமாக அமர்ந்து இருந்தனர்.
சிலர் அலைந்துக்கொண்டு இருந்தன்ர்..
அதை பார்த்த ஒருவர் இதான் open university
அதான் இங்க படிக்குதுக என கமென்ட் அடிக்க..
சரி என ஒரு பார்வை பூங்காவை நாம் அலசினால்,
அங்கே அங்கே மறைவாக,
தெளிவாக சுமார் இருபதுக்கு குறையாமல்
காதலர்கள் அமர்ந்து கடலையில் தொடங்கி,
மொக்கையில் அமர்ந்து இருந்தனர்.
ஆனால், நாம் மாலை நான்கு மணிக்கு வெளியே வரும்போது
அனைத்து மாணவர்களும் வெளியே வர தொடங்க,,
நல்ல பராமரிப்பு.. நேரம் கிடைக்கும்போது
ஒரு தடவை சென்று வரலாம்

anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/12/2010 11:11:26 AM
tea time..

All hard worker does not be a winner but,
every winner must be a hard worker.
- Abdulkalam
ஊரில் இயல்பான வாழ்க்கை செல்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லை.
சில சமயங்களில் மின் தடையும் இருக்கிறது.
உலகம் முழுவதும் பொருளாதார தேக்கத்தின்
பாதிப்புகளில் பல்வேறு நகரங்கள் இன்னும் மீளவில்லை என்றாலும்,
நமது ஊரில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு குறைவில்லை.
எல்லா புகழும் இறைவனுக்கே!

கடைசியாக அஞ்சல் செய்த கதைக்கு
நமது வாசகர் ஒருவரின் மின்னஞ்சல்

'ஐயா, நீர் புலவர், நான் இல்லை, நான் இல்லை, நான் இல்லை, இதற்குண்டான அணைத்து பொற்காசுகளையும் நீரே வைத்துக்கொள்ளவும், எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டாம், எனக்கு வேண்டவா வேண்டாம்...............'
..............))))))j/k
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/8/2010 5:14:47 PM
Nice One.................................................. must read no tension…cooooooooool

ஒரு அழகான கிராமம்.அந்தக்

கிராமத்தின் தலைவருக்கு ஒரு

பெண் இருந்தாள்..அவளைப் போல்

ஒரு

அழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை

கேட்டதும்

இல்லை.அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச்

சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து

விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த

கிராமமும் அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்

வேறு வழி

தெரியாத காதல் ஜோடி ஊரை

விட்டு ஒட

தீர்மானித்து ஒரு

நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர்.

உடனே

ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்

தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே

முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள்

அந்த்க்

காதலை ஏற்றுக்

கொள்ள முடிவு

செய்து செய்தித்தாளில்

விளம்பரமும்

கொடுத்தனர்.அதைப்

பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர்

திரும்பியது. சந்தோஷப் பட்ட

ஊர்

மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான

முறையில்

திருமணம் செய்ய

முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை

வாங்க

நகரத்திற்குச்

சென்றிருந்தனர்.அப்போது

எதிர்பாராதவிதமாக ஒரு லாரி

மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்

எதிரிலேயே

உயிர்
துறந்தான்.

உடனே அந்தப்

பெண்னும்

மனநிலை

பாதிக்கப்பட்டாள்.



ரொம்ப நாட்களுக்குப்

பிறகு

நினைவு திரும்பிய அந்தப் பெண்

குடும்பத்தினருடன்

வசித்து

வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி அவள்

மகள் அவளுடைய
காதலன் நினைவாக

வைத்திருக்கும் உடையில்

இருக்கும்

இரத்த்க் கறையை

உடனே துவைக்க வேண்டும்

என்றது,இல்லா விட்டால்

மோசமான

விளைவுகள்

ஏற்படும் என்றும் எச்சரிக்கை

செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை..

அடுத்த நாள் அதே

தேவதை அந்தப் பெண்னின்

தந்தையிடமும் கனவில்

எச்சரித்தது.ஆனால் அவரும்

அதைக் கண்டு

கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின்

கனவிலேயே தோன்றி

எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப் பற்றிக்

கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம்

உணரப்பட்டது.அவள் தாய்

அதை

துவைக்கக் கூறினாள்.

உடனே அந்தப் பெண்னும்

அதைத்

துவைத்தாள்.
இருந்தும் தேவதை

மறுபடியும் அடுத்த நாள்

கனவில்

வந்து கறை சரியாகப்

போகவில்லை

என்று

எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண்

அத்துணியைத்

துவைத்தாள்.இருந்தும்

கறை

போகவில்லை.

அடுத்த நாள் காலையில்

அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத்

திறந்தாள்.அப்போது கனவில்

வரும் அதே பெண் நின்று

கொண்டிருந்தாள். அவள் முகம்

கனவில் வருவதைப்

போல் கனிவாக

இல்லாமல்

வெளிறிப் போய் இருந்தது.உடனே

இவள் பயத்தினால்
அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன்

கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்

எக்ஸல் போடு கறை போயிடும்"

என்றது.



இதைப் படித்ததும் உடனே
என்னை

உதைக்கத் தோணுமே உங்களுக்கு!

நானே இதை எனக்கு

அனுப்பியவரைத்

தேடிக்கிட்டு

இருக்கேன்.....
...................)))))))))))))))
( email message )
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/7/2010 5:32:20 PM
சிந்தனைகள்

‘நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பது, இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது’ என்கிறார் புத்தர்.

நாம் எதைச் சிந்திக்கிறோம் என்பதோடு, நாம் எதை ஆழமாக நம்பிச் சிந்திக்கிறோமோ அது நம்முடைய வளர்ச்சியில் அதிகமாகப் பிரதிபலிக்கிறது.

மனம் எதை ஆழமாக நம்புகிறதோ அதைத்தான் மனிதன் சாதிக்கிறான்.

தொழிலில் வெற்றியும், தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மனப்பான்மையினால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
வெற்றியைச் சிந்தியுங்கள். வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள். வெற்றியை உருவாக்குவதற்குத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்.


anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


10/1/2010 7:03:46 AM
tea time..

அதிகாலை சற்றே பொழுது புலர்கிறது.
நமதூர் பேருந்து நிலையத்தில்
தினமும் அதிகாலை ஒரு கூட்டம் கூடுகிறது.
இதில் கட்சி பேதமில்லை,
மத பேதமில்லை,
அனைவரும் ஒன்று கூடுகின்றனர்..
அனைத்து விஷயங்களும் அலசுகின்றனர்.
எல்லாமே ஐந்து நிமிடங்கள் தான்,
பின்னர் அவர்கள், அவர்கள்,
அன்றைய செய்தி தாள்கள் வாங்கிக்கொண்டு
சென்றுவிடுகின்றனர். இது அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சி.
இன்று மட்டுமல்ல..

இதுபோல் ஒரு சகோதரத்துவம் பார்க்கும்போது
நம்மிடம் ஒரு கேள்வியும் எழுகிறது..
அது என்னவென்றால்... நேற்றைய நினைவுகள்..
நேற்று தீர்ப்பு வெளியாகும் நாள் என்பதால்
ஊரே அமைதியாக இருந்தது..
காவல் துறை நல்ல பலத்த பாதுகாப்பு போட்டிருந்தது.
மத்யம் எல்லாம் காவல்துறை வாகனங்கள் ஊரில் சுற்றி வந்தது.
மக்கள் நடமாட்டம் அதிகமில்லை.
பல கடைகளும் மத்யம் முதல் அடைக்கப்பட்டு இருந்தது.
(அப்படியே திறந்து இருந்தாலும்..)
தீர்ப்பை எதிர்பார்த்து அனைவரும் தொல்லைக்காட்சி முன்னால் அமர்ந்து இருந்தால், லக்னோவில் கூட
அந்த பதட்டம் இல்லை, நம்ம ஊரில்

வேற ஒன்னும் இல்லை..
சரியாக 3.25 மணி இருக்கும் என நினைக்கிறேன்.
மின்வெட்டு தொடர்கிறது..
அட தேவுடா... என நினைத்து அமர்ந்து..
சரியாக மாலை 4.45மணிக்குத்தான் மின்சாரம் வந்தது..
வந்ததும் தீர்ப்பு என்ன என்று பார்த்தால்..
இருக்கிற இடத்தை மூன்று பங்காக பிரித்து கொடுக்கனும்
என சொல்ல..
நாமும் சொல்லலாம் போங்கடா நீங்களும்... உங்க....
.................)))) j/k

இதில் இன்னும் சில பேர் என்ன நினைத்துக்கொண்டார்கள்
மூனு பேருக்கும் பிரித்து கொடுக்கனும் என தீர்ப்பு வந்ததும்
ஒரு பள்ளி, ஒரு கோவில் , ஒரு சர்ச் கட்டனும் என..
ஹாஆஆஆஆஆஆஆஆ...................))))
ஆமாம் இந்த தீர்ப்புக்கு பயந்தா ஊடகங்கள்
இத்தனை பூச்சாண்டி காட்டியது?
ஆமாம் இதற்கா 7கோடி ரூபாய்க்கு லத்தி வாங்கினார்கள்?
இதான் இந்தியா..




anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


9/25/2010 12:14:22 PM
Tea time..

அன்பான நட்புகளே
என்ன சேதி? எப்படி இருக்கீங்க?
எப்படி போகுது வாழ்க்கை பயணங்கள்?!

முகமதுரபியைப் பற்றி நாம் எழுதிய கட்டுரைக்கு
வளைகுடா வாசகர் ஒருவர் அழைத்து பேசினார்.
அவர் வெளினாடு செல்வதற்காக (1990)
இரண்டு மாதங்கள் இருந்தது ஞாபகத்தில் வந்ததாம்,
மீண்டும் ஒரு முறை மும்பை சென்று
சில நாட்கள் பார்க்கவேண்டுமாம்.
heyyyy.......... nostalgia..

வாக்காளர்களின் பட்டியலில் விடுபட்டவர்களின் சேர்க்கை
இரன்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அதன் சேர்க்கை விபரத்தின் புதிய தொகுப்பு
இப்போது வந்துள்ளது..
பெயர் கொடுத்தவர்கள் சென்று பார்க்கலாம்.
இதன் பட்டியல் பேரூராட்சி அலுவலகத்திலும்,
கிராம நிர்வாக அலுவலகத்திலும் உள்ளது.

ஊருக்கு வருபவர்கள் எங்கேயாவது வெளியூர் செல்லும்போது
கண்டிப்பாக புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை தேவைப்படுகிறது.
வெளினாடுகளில் நம் பாக்கெட் கிழிய.. அட்டைகள் இருக்கும்.
ஆனால், இந்தியாவில் அதுபோல நம்மிடம் இல்லை.
அதற்காக சில டிப்ஸ்..
நமது அஞ்சலகத்தில் அடையாள அட்டை கொடுக்கிறார்கள்.
இதற்காக ஆகும் செலவு வெறும் 250 ரூபாய் தான்.
எனவே, காசை பார்க்காமல் எடுத்து வையுங்கள்.
இது ஒன்றும் சாதாரன அட்டை இல்லை.
நடுவன் அரசு வழங்கும் அட்டை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

travel tips..

நமது ஊருக்கு அருகாமையில்
அதிக செலவு இல்லாமல்
ஒரு அழகான பிக்னிக் ஸ்பாட் செல்லவேண்டுமா?
இருக்கவே இருக்கு.
'வடுவூர் பறவைகள் சரனாலயம்'
நமது ஊரிலிருந்து மன்னை சென்று,
அங்கிருந்து வடுவூர் செல்லனும் 14 கி.மீ.
நல்ல பெரிய ஏரி.. நிறைய வெளி நாட்டு பறவைகள் வருகிறது.
டிஸம்பர் முதல் மார்ச் வரை நல்ல சீசன்..
ஆனால், சுத்தமாக அமைதியாக, இருக்கிறது.
பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்..
நமக்கு அதிக செலவும் இல்லை.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


9/23/2010 12:10:57 PM
அன்றைய காலங்களில் வெளி நாட்டு பயணங்கள் என்பது
மிகவும் சிரமமான வேலை.. சிலரால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
அந்த மாதிரி காலங்களில் பயணம் செல்வது என்றால் பம்பாய் செல்லனும்.
அங்கே யாராவது ஒரு ஏஜென்டிடம் பணம் கட்டி, பயணத்திற்காக காத்து இருக்கனும்.
அது சில வாரங்களும் ஆகும், சில மாதங்களும் ஆகும்,
இன்னும் சொல்லப்போனால் சிலருக்கு வருடங்கள் கூட ஆகி இருக்கிறது.
இப்போது உள்ளது போல அத்தனை சுலபம் அல்ல..

அது போல பம்பாய் சென்ற மக்கள்,
முகமதுஅலி சாலையிலும்,
செம்பூரிலும், சீத்தாகேம்பிலும்,
முசாபர்கானாவிலும் வாழ்ந்தார்கள்,
அது போல மொழி தெரியாத ஒரு மானிலத்தில்,
ஒரு நகரத்தில் இருந்த இவர்களுக்கு
மிகவும் பரிச்சயமான ஒரு குரல் இன்றுவரை என சொல்லப்போனால் அது முகமதுரபியின் குரல்தான்..

சமீபத்தில் முகமது ரபியின் மறைந்த தினம் சென்றபோது
காலம் சென்ற ரபியின் ஞாபகம் வருகிறது.
அந்த முகம், வழுக்கை தலை, உதட்டில் இருக்கும் சிரிப்பு..
இப்போது உள்ளவர்களுக்கு அவரை தெரிய வாய்ப்புகள் கம்மி.
ஆனால், அன்றைய காலங்களில் அவரது வாய்ஸ்க்கு நல்ல மவுசு இருந்தது..

அன்றைய புராதான மும்பையில் பழைய கட்டிடங்களில் நடுவே,
நெரிசலான சாலைகளில், குறுகலான சந்துகளில் நாம் உலாவரும்போது
எங்கேயோ இருந்து ஒலிக்கும்
அந்த ஹிந்துஸ்தானி ஹிந்தி பாடல்கள் வாவ்வ்..

எப்படி மலபார் முஸ்லிம்களுக்கும் பழைய ஹிந்தி பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதோ,
அதுபோல நமது மக்களுக்கும் பழைய பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
அதனால் தான் நமது மக்கள் பலர் இன்னும் ரபியின் பாடல்களை ரசித்துக்கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இதை படிக்கும் நமது மக்களுக்கு அன்றைய நாட்களின் எண்ணங்களை
அசைபோட வைக்கும் என்பதில் ஐயமில்லை. அதுபோல பழைய
பின்டிபஜாரை ஞாபக படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

அன்றைய காலத்தில் நமது இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவர்
பெயர் ஞாபகம் இல்லை... அவர் காஷ்மீர் சென்ற போது
பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்கிறார்..
நீங்கள் முகமதுரபியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என..
அதற்கு அவர் சொன்னார் 'இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கு யுத்தம் தொடங்கும் நேரத்தில்,
முகமதுரபியின் பாடலை ஒலிபரப்பினால், உடனே இரு நாட்டினரும் சொல்வார்களாம்,
இந்த பாடல் முடிந்த பின்பு யுத்தம் தொடங்கலாம் என...))))'
எவ்வளவு பெரிய செய்தி.. இன்றும் பலர் முகமதுரபியின் பாடல்கள் என்றால் போதும்..
பலர் எப்போதும் காரில் ஒலிக்க கேட்டுச் சொல்வார்கள்...
அவரது பல பாடல்கள் புகழ்பெற்ற பாடல்கள்..
'aanese uske....'
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


9/21/2010 3:35:54 PM
Tea time..

ஆத்மார்த்த நட்புகளே
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
போகுது பொழுதுகள் இனிதே..

மத்திய கிழக்கு நாடுகளில் இன்னும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருக்கலாம்.
ஆனால் தாயகத்தில் அப்படி இல்லை,
இன்று காலையில் கூட சுமார் ஒரு மணி நேரம்
தூவானம் தூவ.. அழகிய மழை
ஆனால் இதுபோன்ற மழைக்கு
குடை தேவை இல்லை,
மழையில் நனைந்தபடி
உற்சாகமாக குளிக்க நல்ல மழை...
ஆனால் இப்போ சீதோஷ்ன நிலையில் மாற்றம்
வெயில் அடித்துக்கொண்டு இருக்கிறது.

படித்ததில் ரசித்தது..
சென்ற வாரம் ஹின்டு நாளிதழில்
படித்த ஒரு கட்டுரை
அப்படியே லிங்க் தருகிறேன்..

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/article697936.ece
(plz copy and paste ur browser)

பேரூராட்சி தலைவருடன் ஒரு சந்திப்பு..

அதாவது நமது ஊரின் பேரூராட்சி தலைவருடன்
வெளி நாடு வாழ் நமதூர் மக்களும் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி நடத்த ஒரு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறோம். விரைவில்
இதன் தொகுப்புகள் தருகிறோம்...

சமீபத்தில் ரசித்து ரசித்து சிரித்த ஒரு sms

'A new sim is released in
market by SPACETEL.
buy sim for rs 59 and
get rs 999 talktime.
call rates 10p/m.
monthly 12000 sms free.
GPRS browsing free,
caller tune for 3 years,
Life time validity...



But,
1 condition
Tower neengathan nattukkanum...)))))ha...aa..




anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


9/18/2010 12:01:24 PM
Keeping Well When Monsoon Dwells

First showers of monsoon are heartily welcomed by everyone after experiencing the scorching heat of summer. But monsoons reduce the immunity of our body and make us susceptible to many diseases which are commonly associated with this season. It is time for us to keep our body resistant against diseases by boosting our immunity and taking precautions against these diseases.

The diseases associated with monsoon are malaria, jaundice, gastro intestinal infections like typhoid and cholera. Apart from these, viral infections like cold and cough also make their presence felt.

Puddles of water formed due to rain become breeding grounds for mosquitoes which spread diseases like malaria and dengue fever. As a precautionary measure against mosquito bite born diseases one can use mosquito net around the bed which is better choice to mosquito repellants like mats and coils. A mosquito repellant cream is the best choice when you are away from home. Fumigating the house with smoke of dried neem leaves in evenings for 1-2 minutes is an excellent ayurvedic method to keep mosquitoes away.

Pollution of drinking water during monsoon is very common. It is very necessary to drink clean and pure water when water borne monsoon diseases like diarrhea and gastro intestinal infections threaten us. Drinking boiled water at home is strongly recommended to tap water. Prefer mineral water of government certified companies when you are away from home.

Walking in dirty water during rainy season leads to numerous fungal infections which affect toes and nails. Diabetic patients have to take a special care about their feet. Always keep your feet dry and clean. Avoid walking in dirty water. Keep your shoes, socks and raincoats dry and clean. Drying clothes with fumes of loban and dry neem leaves is recommended in ayurvedic texts.


Precautions have to be taken to prevent dampness and growth of fungus (mold) on and around the house where asthmatic patients live. Avoid fumigation in case of asthmatic patients.

Ayurvedic Tips to increase body immunity and preventing diseases of monsoon.

The digestive system gets weakened due to dehydration in summer. This leads to low digestive power. This is further weakened by vitiation of doshas and dhatus due to monsoon. Hence following diets which increase power of digestion and strengthen the digestive system would be beneficial in rainy season.
Light foods prepared out of old barley, rice and wheat.
Sour and salted soups of vegetables.
Drinking boiled and cooled water mixed with little honey.
Consuming little quantity of wine prepared out of grapes.
Adding ginger and green gram in daily diet.
Eating warm food.
Avoid the following
Sleeping in daytime.

Over physical exertion.

Over exposure to sun.

Always keep the surrounding dry and clean. Do not allow water to get accumulated around.

Keep your body warm as viruses attack immediately when body temperature goes down.

Do not enter air conditioned room with wet hair and damp cloths.

Dry your feet and webs with soft dry cloth whenever they are wet.
Wash vegetables with clean water and steam them well to kill germs.
Avoid eating uncooked foods and salads.
Drink plenty of water and keep your body well hydrated.
Do not allow kids to play in stagnant polluted water filled puddles.

source;
http://ayurhelp.com/articles/mansoon_care.htm

anwar E-mail: anwaronline City: mkr Country: tn


9/16/2010 8:43:14 AM
சென்று வா ரமலானே...

இறைவனனின் ஆணை ஏற்று
இப்புவிக்கு வருகை தந்து
எங்களுடைய செயல்களை சீராக்கி எண்ணங்களை உயர்வாக்கி
நடைமுறைகளை செம்மையாக்கினாய்
இறைவனுக்கு வணங்கியும்
வறியவர்களுக்கு வழங்கியும் மகிழ செய்தாய்
எங்களுக்கும் இறைவனுக்குமான தொடர்பினை
உள்ளத்தாலும் உணர்வாலும் உறுதியாக்கினாய்
உம்மால் நாங்கள் அடையபெற்ற நன்மைகள் ஏராளம்.
எல்லாம் வல்ல இறைவா இந்த வருடம் போல இனி வரும்
காலங்களிலும் ரமலானை அடைய செய்வாயாக...

I.Mohamed Sulthan
kavithai E-mail: kavi City: dxb Country: uae


9/11/2010 11:09:49 AM
Tea time..

ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய
உங்கள் அனைவருக்கும் இனிய பெருனாள் வாழ்த்துக்கள்

ஊரில் இனிதே பெருனாள் நேற்று நடந்தது.
தமிழகத்தின் தென்பகுதியான தூத்துக்குடியில் பிறை பார்த்ததாக
வந்த தகவலை அடுத்து நமது ஊரிலும் ஆலோசித்து பெருனாள் அறிவித்தார்கள்.
பெருனாள் சிறப்பாக இனிதே அனைத்து மக்களும் கொண்டாடினார்கள்.
சிறப்புத்தொழுகையும் நடைபெற்றது.
தவ்ஹீத் ஜமாத் சார்பாக காலை 7.30மணிக்கும்
ஜும்மா பள்ளியில் காலை 9.00 மணிக்கும் தொழுகை நடைபெற்றது.
பெண்களுக்கு என ஒரு சில இடங்களிலும், தக்வா பள்ளியிலும் தொழுகை நடைபெற்றது.
ஊரில் நேற்று இரவில் நல்ல மழை பெய்தது
வானம் இப்போதும் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
பெருனாளை கொண்டாட பலரும் தாயகத்து வந்துள்ளனர்
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn49


9/5/2010 11:35:49 AM
தமிழத்திற்கு சுற்றுலா வந்தவர்களில் மலேசியர்களுக்கு 2வது இடம்-முதலிடத்தில் இலங்கை


சென்னை: தமிழகத்திற்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டவர் வரிசையில் மலேசியாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்த மலேசிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாகும்.

இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது இலங்கையாகும். கிட்டத்தட்ட 5 லட்சம் இலங்கையர்கள் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்து போயுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் இதுகுறித்துக் கூறுகையில், தமிழகத்திற்கு மலேசியர்கள் அதிக அளவில் வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவர்களின் குடும்ப வேர்கள் இங்குதான் உள்ளன. பூர்வீகம் இங்குதான் உள்ளது. இதுதான் மலேசியர்கள் அதிக அளவில் தமிழகத்திற்கு வர முக்கியக் காரணமாகும்.

குடும்ப விழாக்கள், மத ரீதியான விழாக்கள், மருத்துவ சிகிச்சை, சுற்றுலா என பல காரணங்களுக்காக மலேசியர்கள் பெருமளவில் தமிழகத்திற்கு வருகின்றனர்.

மேலும் சென்னை-கோலாலம்பூர் இடையே தற்போது அதிக அளவில் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்ன. விமானக் கட்டணம் குறைந்துள்ளது. இவையும் கூட அதிக அளவில் தமிழகத்திற்கு மலேசியர்கள் வர ஒரு
காரணமாகும்.

மலேசியாவுக்கு தமிழகத்திலிருந்து தினசரி 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், திருச்சி, சென்னைக்கு கூடுதலாக ஏர் ஏசியா விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் அதிகமாகும். அதாவது கிட்டத்தட்ட 20.5 லட்சம் பேர் தமிழகத்திற்கு வந்திருந்தனர். 2வது இடம் டெல்லிக்கும், 3வது இடம் உ.பிக்கும் கிடைத்தது என்றார்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆயுளை அதிகரிக்கும் காபி: இருதய நோயையும் எதிர்க்கிறது


ஏதென்ஸ்: காபி குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு வருமா என்று ஏராளமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அன்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று காபி குடிப்பதால் தீங்கில்லை என்று தெரிவித்துள்ளது.

காபி குடிப்பதால் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்குமா என்று கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.

அந்த விஞ்ஞானிகள் 65 வயது முதல் 100 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை சுமார் 485 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தினமும் 1 அல்லது 2 கோப்பை காபி கொடுத்துள்ளனர். காபி குடித்த பிறகு அவர்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி ஆராய்ந்தனர்.

காபி குடித்த பிறகு அவர்களின் ரத்த நாளங்களில் ரத்தம் சீராக ஓடியது. இளைஞர்களின் ரத்த ஓட்டம் இயல்பாகவே சீராக இருக்கும். ஆனால் இந்த முதியவர்களின் ரத்த ஓட்டம் காபி குடித்த பிறகு இளைஞர்களின் ரத்த ஓட்டத்தை ஒத்திருந்தது. காபி குடிப்பதால் புற்று நோய் ஏற்படும் என்பதில் உண்மை கிடையாது.

மேலும், தினமும் காபி குடிப்பதால் இருதய நோயை குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இருதய நோயை எதிர்த்து போராடலாம். காபி குடிப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

நன்றி வணக்கம் மலேசியா






anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn49


8/25/2010 11:53:33 AM
அன்பான சகோதரர்களே
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

ரமலான் மாதன் இனிதே செல்கிறது.
கடந்த வெள்ளி முதல் பெய்த நல்ல மழையால்
நல்ல இதமான தட்பவெப்பம் நிலவுகிறது.
நேற்று காலை முதல்
அழகான அதே சமயம் வேகம் இல்லாமல்
தூறல் மழை ..
குடை இல்லாமல்
இந்த மழையில் உற்சாகமாக நடக்க...
wowwwwww........
சின்ன சின்ன மழைத்துளி தான் ஆனால் அது கொடுக்கும் சந்தோசம்
அதுவும் இந்த மழையில் உற்சாகமாக டூவீலரில் உலா வந்தால்..

ஊரில் மின் வெட்டு சொல்லவேண்டியதில்லை..
நேற்று இரவு கூட சில பகுதிகளில்
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெரியார் நகரில்
மின் வெட்டு இருந்தது.. சில நேரங்களில்
அரை கரன்டும் இருக்கும்.. மலர்ந்தும் மலராத....))) ...

ஏங்க உங்களுக்கு தத்தி பாலா தெரியுமா?
ஆம்லாவது தெரியுமா?
வேற ஒன்றும் இல்லை..
நெல்லிக்காயின் பெயர்கள் தான்..
சமஸ்கிருதத்தில் தத்திபாலா
ஹிந்தியில் ஆம்லா
ஆங்கிலத்தில் indian coosberry.

நமது அன்டை மானிலமான கர்னாடகாவில்
பெங்களூருக்கும், மைசூருக்கும் இடையில்
ஒரு அழகிய ஊர் இருக்கிறது.
அந்த ஊரின் பெயர் மேல்கோட்டை.
அங்கே என்ன விசேஷம் அதானே கேட்குறீங்க?
விசேஷமே அந்த ஊரு தமிழ் கிராமம்
தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த பிராமனர்கள் வாழும் ஊர்
எப்படி கேரளத்தில் பல ஊர்களில் வாழ்கிறார்களோ அதுபோல,
கர்னாடகாவில் உள்ள தமிழ் கிராமம்..

ரமாலன் மாதன் என்றாலே
நோன்பு கஞ்சி இல்லாமலா?
இது அனைவரும் விரும்பி குடிக்கும் கஞ்சி..
நமது ஊரிலும் அனைத்து பள்ளிகளிலும்
நோன்பு கஞ்சி காய்ச்சி நோன்பாளிகளுக்கு வழங்குகிறார்கள்..
இந்த கஞ்சி வயிற்றுக்கும் நல்லது..
இதன் வரலாறு பார்த்தோமானால்,
நம்ம ஊரில் தொடக்கத்தில்..
'பெரிய ஆச்சி மரைக்காயர்' என்பவர் இருந்து இருக்கிறார்.
அவர் தான் கஞ்சிக்கே பேமஸ்..
அவர் தான் முதன் முதலாக நம்ம ஊர் பெரிய பள்ளியில்
நோன்பு கஞ்சி காய்ச்சியவர்..
எப்படி சமூசாவுக்கு அலிமுகமதோ?
வாடாவுக்கு ஒரு கோவார்சாவோ? அது போல
அவர் கஞ்சி காய்ச்சிய பின் தான்
அடுத்தவர்கள் நமது பள்ளிகளில் கஞ்சி காய்ச்சி இருக்கிறார்கள்.
அதற்கு அப்புறம் சொல்லப்போனால் சேனா அப்பா..
இதான் நமது ஊரில் நோன்பு கஞ்சி தொடக்கத்தின் நினைவுகள்
இன்ஷால்லாஹ் அடுத்த மடலில் பார்ப்போம்


anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn


8/16/2010 12:12:17 PM
அன்பானவர்களே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி
எப்படி இரு