
ஒரு மழைக்கால....முன்னிரவின்..
இருண்ட
வனமும்..
"சோ"
வென்று ..பெய்த...மழையும்....
நீ
இல்லாத வெறுமையை....அதிகமாக்கின....!
***
காதலுடன்
நீ
பார்த்த...கடைசிப் பார்வை...
ஈட்டியாய்
என் நெஞ்சை ...குத்திக்
கிழிக்கிறது!
உன்
உதட்டோர மச்சமும்...
நெற்றி
விழும்..தலை முடியும்...
கூரான
நாசியும்....
கவனமாய்...
என்
கவிதைகளுக்கு ...கருவாகின்றன....!
***
ஒவியாமாய்...தலைசாய்த்து....
ஒய்யாரமாய்...
நீ ... பார்க்கும்..
காவியக்
காட்சியினை...
கவிதைகளால்...சொல்ல முடியாமல்..
மெளனத்தில்...
தற்கொலை
செய்து கொள்கின்றன....
வார்த்தைகள்...!
***
உன்
விரல்களால்...
என்
என் தலை கோதி....
சமாதி
நிலைக்குள்...கண நேரம்....எனைத்
தள்ளி....
கல
கல
சிரிப்பொலியால்..மீண்டும்
எனை மீட்டெடுப்பாய்....!
***
உன்
ஒவ்வொரு இமைத்துடிப்பும்....
ஒற்றை
வரிக்கவிதை....
அதை
வாசித்துக் கொண்டே...
கூடவே
நகருகிறது...என்
இதயம்..!
***
எல்லா வார்த்தைகளையும்....
வாசிக்க தெரிந்த....எனக்கு....
உன் பெயரை....மட்டும்....
சுவாசிக்கத்தான்
தெரிகிறது....!
***
என்
இமைகளுக்குள்
நீ...இருப்பதால் தான்....
பகல்
முழுதும்...உன்னைத்
தொட்டு விளையாடியும்....
இரவுகளில் அணைத்துகொண்டும்...உறங்குகிறேன்!
***
உன்
கண்ணசைவில்
தான்...நகர்கிறது
என் காலம்....
அதனால்
தான்....விடியலுக்காய் காத்திருக்கும்...பறவைபோல...
உன் விழிகளுக்காக....காத்திருக்கிறேன்...!
***
எத்தனை
எழுதி என்ன...
என்
மொத்த
கவிதையும்...
சத்தமின்றி தோற்றுப்போகிறது....
உன்
மெளனம்
என்னும் கவிதையிடம்...!
- dheva. S