அன்பான வாசகர்களே....!
நாம் அனைவரும்
மற்றுமொரு
வருடத்தின்
துவக்கத்தில்
இருக்கிறோம்.
சிலர் ஆங்கிலப் புத்தாண்டுதானே.....
நாம் கொண்டாடத்தேவையில்லை
என்ற எண்ணத்தில்
இருக்கலாம்.
எப்படி இருந்தாலும்
மிகைப்பட்ட
கணக்கீடுகளுக்கு ஆங்கிலப்புத்தாண்டுதான்
ஒரு மூலமாய்
இருப்பதால்
சில விசயங்களுக்காக
நாமும் கணக்கில் எடுத்துக்கொள்வோம்.
கடந்த வருடத்தை
பின்னோக்கிப்பார்ர்க்கும்
போது வழக்கம்
போல காலம்
தனது பதிவினை
ஆழமாகாவே
பதிவு செய்து விட்டு வரப்போகும்
வருடத்தில்
காரியங்கள்
நிகழ்த்த
காத்துக்கொண்டிருக்கிறது.
புள்ளி விபரங்களை
நாம் எடுத்துப்பார்க்க
வேண்டிய அவசியத்த நகர்த்திவிட்டு
பார்த்தால்....ஏராளமான விசயங்களை
நாம் உணரமுடியும்.
ஒவ்வொரு
வருட முடிவும்
நிலையாமையை
விளக்கிவிட்டு,
மனித ஆணவத்திற்கும்
அகங்காரத்திற்கும்
ஒரு பாடம்
சொல்லி சென்றிருப்பதை
நம்மால் உணரமுடியும். அது பணம்தான் பிரதானம் என்று செல்வத்தில்
கொழித்த நாடுகளுக்கும்
மக்களுக்கும்
சில அறிவுரைகளையும்
கண்டிப்பான
பாடத்தையும்
நடத்தி இருக்கிறது.
வன்முறையால் வெற்றிகொள்ளலாம்
என்று எண்ணியவர்களுக்கு
வன்முறையின்
மூலமும், சூழ்ச்சிகளால்
வெற்றிகொள்ளலாம்
என்று எண்ணியவர்களுக்கு
சூழ்ச்சியாலேயும்,
அன்பினால்
வெல்லலாம்
என்று எண்ணியவர்களுக்கு
அன்பினாலும்
பாடம் நடத்தி இருக்கிறது.
உலகப்புகழ்பெற்று
செல்வத்தில்
மிதந்த சீமான்கள்
மற்றும் சீமாட்டிகளின்
மரணங்களின்
மூலம்... நிலையாமையை
எடுத்துச்சொல்லி
இருக்கிறது. அவர்களின் செல்வமும்
புகழும் ஒரு நொடியில்
பொடிப்பொடியான
காட்சிகளை
எல்லாம் நாம் கண்டோம்.
இயற்கையின் சீற்றங்களை
காண்பித்து
மானுடர்களின்
திட்டங்களும்,
வஞ்சங்களும்
வெறும் தூசு என்று
உணர வைத்திருக்கிறது.
மனிதர்களின்
எண்ண மேம்படு
அதிகரிக்க,
அதிகரிக்க
சுற்றியுள்ள
சூழல் இதமாக மாறி
எல்லோரும்
நிறைவாக வாழ வேண்டும். எண்ணங்கள்
மேம்பட நம்மை சுற்றி
நடக்கும்
விசயங்களைப்பற்றிய
ஒரு விழிப்புணர்வு வேண்டும். நமது விழிப்புணர்வு
மேலோங்கி
இருந்தால்
நம்மால் தெளிவாக ஒரு விரிந்த
கண்ணோட்டத்தில்
சிந்திக்க
முடியும்.
தெளிவான சிந்னைகளும்
தொலை நோக்குப்
பார்வையும்
விசாலமான
மனதும் இருந்து விட்டால், நாம் பெருமைக்குரிய
மனிதர்களாக
வாழ முடியும்.
சம காலத்தில்
நமக்கு ( நமது ஊர் மக்களுக்கு)
ஏற்படும்
பிரச்சினைகளுக்கு
என்ன காரணம்
என்று நமது
இணைய ஆசிரியருடன்
கலந்து ஆலோசித்த போது சில
காரணங்கள்
எங்களுக்கு
தெரியவந்தது;
1)
நமது ஊரில்
சென்று தொழில் செய்து வாழும் சூழல் இல்லை,
ஏனென்றால்
நமது ஊர்
மக்களே நமது ஊர்
வியாபரிகளை
ஊக்குவிக்காது
வெளியூர்
சென்று பொருட்கள்
வாங்குவதால்
நமது ஊரின்
பொருளதரம்
மந்தப்பட்டு
கிடக்கிறது.
2)
நமது ஊரிலும்
சுற்று வட்டாரத்திலும்
குறிப்பிட்டு
சொல்லும்
படி தொழிற்சாலைகள்
இல்லை. இதானால் புதிய
மக்களின்
வரத்து இல்லை.
3)
இளம் சந்ததியினருக்கு
தெளிவன வழிகாட்டுதல்
இல்லை.
இப்படி
பல காரணங்களை
பட்டியலிட்டுச்
சொல்லிக்கொண்டே
போகலாம் ஆனால் இதற்கு
நாம் என்ன
செய்ய போகிறோம் என்ற கேள்வியும்
உடன் வந்தது. பெரும்
தீயாய் இருந்து மாற்றம் செய்ய ஆசைப்படுவதை
விட ஒரு
சில மணித்துளிகளேனும்
எரிந்து வெளிச்சம்
கொடுக்கும்
தீக்குச்சி
போல நாமும் ஒளி
கொடுத்து மறையாலமே....!
சில கணங்களே
எரியப்போவது
என்றாலும்
வெளிச்சம்
கொடுத்த தீக்குச்சியாய்
மடியலமே....என்று ஆசிரியர்
சொன்னார்.
அந்த "தீ"
க்குச்சிதான்
மதுக்கூர்.COM
மக்களுக்கு விழிப்புணர்வு
கொடுப்பது,தன்னார்வத்தொண்டு
நிறுவனங்களை
ஒன்று சேர்ப்பது,
அடையாளங்காட்டுவது
மற்றும் ஊக்குவிப்பது
என்று முடிவு செய்தோம். அதற்கு இந்த தொழில்
நுட்பத்தின்
வரப்பிரசாதமான்
இணையம் எங்களுக்கு
பெரு உதவி
செய்கிறது
மேலும் அன்பான சமுதாய முற்போக்கு
எண்ணம் கொண்ட வலுவான
இளைஞர்களின்
உதவியும்,
ஒரு நாள்
இணையத்தில்
ஏதாவது கோளாறு ஏற்பட்டால்
கூட உலகின்
பல்வேறு மூலைகளில்
இருந்தும்
தொடர்பு கொண்டு உடனே அதற்கான
காரணங்களை
கேட்டு தங்களின் உதவி ஏதும்
தேவையா என்று கேட்டவர்களும்
தான் நமது
இணையத்தின்
செயல்பாடுகளுக்கான
தூண்கள்.
நமது ஊரைச்சேர்ந்த
மேலும் நமது ஊரை
சுற்றியுள்ள
கிராமங்களைச்
சேர்ந்த அனைவரும் தங்களின் பங்களிப்பை
வலுவாக காட்டுங்கள். வரப்போகும்
வருடம் மட்டுமல்ல,
இனி எல்லா
வருடங்களிலும்
நாம் ஒரு
மேம்பட்ட
ஒரு ஒப்பான
ஒரு சமுதாயமாக
ஒளிர்வோம்!
இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்!
- மதுக்கூர். COM
ஆக்கம்: S. தேவா