மதுக்கூர் வாசகர் வட்ட சந்திப்பு ………………… நிகழ்வுகள்

 மதுக்கூர் புறா கூண்டு

 

 

 

'இது ஒரு பொன்மாலை பொழுது

இது ஒரு பொன்மாலை பொழுது

வானமகள் நானுகிறாள்...

வேறு உடை......'

 

வார விடுமுறை தினங்கள்   எந்த வித பரபரப்பும் இல்லாத அமைதியான ஒரு பகுதியில்  கணினி விஞ்ஞானம் படித்த இளைஞர்களும்  இனைய ஆர்வலர்களும் ஒன்று சேர்கிறார்கள்  என்ன நிகழ்ச்சி என நமதூரில் பலருக்கும் புரியலை..

 

தே மதுர தமிழோசை உலகெங்கும் பரவச் செய்வோம் என பதாகை..  மனதார வரவேற்கிறோம் தி வெஸ்டர்ன் ஆங்கிலப்பள்ளி என ஒரு கரும்பலகை.. இப்போது நாம் வாசகர் வட்டத்துக்கு வருவோம்.

 

நாம் தாயகம் வந்த போது   இங்கே நமதூர் இனையம் படிக்கும் ஆர்வலர்கள்  ஓருங்கினைந்து நமது வாசகர் வட்டம் நடத்த ஆலோசனை கேட்க  நாமும் அதற்கினங்க...  நமது வாசகர் வட்டம் நிகழ்ச்சி இறை உதவியால் இனிதே நடைபெற்றது.. 

 

விழாவுக்கு வாழ்த்துச்செய்தியை  அதிரை கல்லூரி முதல்வர் அலைபேசி மூலம் தெரிவித்தார்.

 

நாம் நிகழ்ச்சி மாலை 5.00 மணி என அறிவிக்க..  ஒருவர் பின் ஒருவராக வரத்துவங்க..  

அதிகமான இளைஞர்கள் வரத்துவங்கினார்கள்..  அவர்கள் வர.. வர.. நமது ஆர்வம் அதிகரிக்க...

நிகழ்ச்சி சரியாக 5.45 மணிக்கு துவங்கியது..

 

முதலில் வரவேற்புரையை நிஷார் அஹமது(KTM) நிகழ்த்த   இனையத்தின் அறிமுகத்தை,

 துவங்கிய வரலாற்றை இனைய ஆசிரியர் சொல்ல.. அதாவது இந்தியாவிலேயே ஒரு பேரூராட்சிக்கு  முதன் முதலாக இனையம் துவங்கியது நமதூர் தான் என சொன்னார்.

 

வாசகர் வட்டம் நடைபெறுகிறது..

 

நமது   பெண்கள் மேல்னிலைப்பள்ளி ஆசிரியர்  கருனாகரன்( JCI)   மிக அழகாக வாழ்த்துரை நிகழ்த்தினார்.. அதாவது இன்றைய காலத்தில்  தகவல் தொழில் நுட்பம் வள்ர்ந்த காலத்தில்  நமது ஊர் மக்களுக்கு இது போன்ற ஒரு இனையம் நடத்துவது பாராட்டப்படவேன்டியது என்றார்.

 

அதே போல அன்றைய காலங்களில் ஏதாவது  ஒரு விசயம் என்றால், அவர்கள் ஒரு ஜோதிடரை அனுகி  வெற்றிலையில் மை போட்டு தெரிந்துக்கொள்வார்கள்..   அது எந்த அளவுக்கு உண்மை என சொல்லமுடியாது.   ஆனால் தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இன்றைய உலகில்  இது உண்மை என நிருபணம் ஆகிவிட்டது என  நேரலையாக காண்பிக்கப்படும் நிகழ்ச்சிகள்,  மின்னஞ்சல் ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார்.  

 

இது போன்ற விழாவில் கலந்துக்கொள்வது  இது தான் முதல் முறை என்றார்.   மிக அழாகன உரை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

 

நிகழ்ச்சிக்கு சுமார் 25பேர் வந்து இருந்தார்கள்.   நமதூரில் துபாயில் நடந்தது போல நடத்தாமல்

வாசகர் வட்டம் முறையை மாற்றி   மதுக்கூர் இனையதளத்தை அறிமுகம் தான் படுத்தினோம் என்பது தான் உண்மை.  இதற்காக ஒரு கையடக்க கணினியை கொண்டு வந்து   மதுக்கூர்.காம் எடுத்து விளக்கினோம்..

 

அனைவரும் ஆர்வத்துடன் கேட்டனர்.

 

வாசகர்களுடன் நடந்த கலந்துரையாடலில்  தஞ்சையில் வேலைவாய்ப்பு செய்திகளையும்

டென்டர் விபரங்களயும் இனையத்தில் எழுதுங்கள் என ரபீக் சொல்ல,  வார்டுகளில் உள்ள நிலமையையும்,  நன்றாக செயல்படும் கவுன்சிலர்களையும் எழுதுங்கள் என அப்துல்லாஹ் சொல்ல,   நல்ல கவுன்சிலர்களை தேர்ந்து எடுத்து எழுதுகிறோம் என நாம் சொல்ல,

அதை அனைவரும் ஆமோதித்தனர்.   மேல்னிலை பள்ளி முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு (AFTER +2)   நிகழ்ச்சி நடத்தி நாம் வழிகாட்டலாமே என அப்துல்லாஹ்..

 அது போன்ற வேற அமைப்பு நடத்தி அந்த அளவுக்கு பயனில்லை என  S.S.B.கனேஷ் சொன்னார். ஆகையால் சும்மா நேர்முகமாக அது போன்ற நிகழ்ச்சிகள்  நடத்தலாம் என வாசகர்கள் சொன்னார்கள்.

 

அது போல உள்ளூரில் சரியாக  செயல்படாத அதிகாரிகளை  இதில் எழுதுங்கள் பல வாசகர்கள் நம்மிடம் சொன்னார்கள்.   காவல் துறை செய்திகளையும் இதில் எழுதுங்கள் என  காவல்துறை அதிகாரி பன்னீர் செல்வம் சொன்னார்.   மரம் நடும் விழா நாம் துவங்கலாமா என கேட்க

அதில் உள்ள சிரமங்களை S.S.B.கனேஷ்ம், கருனாகரன் சாரும் சொன்னார்கள்.

அது போல ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று  வாரா வாரம் மதுக்கூர் இனையத்தை அறிமுகம் செய்து  ஒரு விளக்கம் கொடுத்து விட்டு வாருங்கள் என  S.S.B.கனேஷ் அழகான எண்ணம் கொடுத்தார்.

 

உண்மையில் நமது இனையம் பயண்பாட்டே நாளைய உலகத்திற்கு தானே….

 

நமதூரில் நடக்கும் விளையாட்டுச்செய்திகளை எழுதுங்கள் அது போல நமதூரில் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும்  மதுக்கூர்.காம் என்ற ஊடகம் அங்கே இருக்க வேன்டும் என வாசகர்கள் சொன்னார்கள்.

 

திருமண நிகழ்ச்சிகள் வாழ்த்துச்செய்திகள்  ஆகியவற்றை பரிமாறுங்கள் என மக்களிடம் சொன்னோம்.  நமதூர் செய்திகளை நமக்கு தெரிவிக்க  நாம் சில செய்தியாளர்களை கேட்டோம்.

யாரும் முன் வரவில்லை.

 

அதே போல கதை கவிதை எழுதவும் சொன்னோம்.  இப்படியே நல்ல ஒரு மாலைப்பொழுதாக நமது வாசகர் வட்டம் சந்திப்பு நடந்தது.   முடிவில் அல்பாஸ் சுல்தான் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்

 

ஆசிரியர் கருனாகரன்

 S.S.B.கனேஷ்

ஷேக்,

ஹபீப்முஹம்மது

ரியாஸ்

நிஜாம்

பாதுஷா

அஸார்

 குத்புதீன்

 இமாம்,

பஹ்சூல் ரஹ்மான்,

அப்துல்லாஹ்

ரபீக்

சாகுல்ஹமீது

கார்த்திகேயன், ,

ஜியாவுல்ஹ

க்ஷேக்தாவுது

 அளீம்,

காவல்துறை அதிகார் பன்னீர்செல்வம்,

 

ஆகியோர் கலந்துக்கொன்டனர்.  நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அழகாக நடத்தி முடித்த  அல்பாஸ் சுல்தான், நிஷார் அஹ்மது, ஏ.என்.எம்.ஹிதாயத்துல்லாஹ்  ஆகியோர்களை இனையக்குழு சார்பாக பாராட்டுகிறோம்.

 

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் ... இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…..!

 

 

- madukkur..com