பொடுகு
தொல்லையா?
பொடுகு
தானே என
அலட்சியமாக
இருந்து
விடாதீர்கள்.
தலைக்கு
குளித்தபின்
முடியை
உலர்த்தாமல் இருந்தாலோ, அழுக்கான
தலைமுடியுடன்
இருந்தாலோ
மற்றும் அதிக
உஷ்ணத்தினாலோ
பொடுகு தோன்றுகிறது.
பொடுகு
வராமல்
தவிர்க்க
ஒருவர்
பயன்படுத்திய
சீப்பு, தலையணை, டவல் போன்றவற்றை
கண்டிப்பாக
பயன்படுத்தக்
கூடாது.
* நெல்லிமுள்ளி,
வெந்தயம்,
சிறிது
மிளகு இவற்றை
ஊறவைத்து
மைபோல அரைத்து
தலையில் தடவி
ஒரு மணிநேரம்
ஊறிய பிறகு, நன்கு
அலசினால்
பொடுகு
தொல்லை
மறையும்.
* நீலகிரி
தைலத்தை
சூடாக்கி
தலையில் தடவி, வெந்நீரில்
ஒரு பெரிய துவாலையை
நனைத்து
தலையில்
கட்டி
விடுங்கள். பிறகு
நன்கு அலசி
விடவும்.
* தேங்காய்
எண்ணெயுடன்
சிறிது
கற்பூரத்தை போட்டு
வைத்து, அந்த எண்ணெயை
தொடர்ந்து
தேய்த்து
வந்தால் பொடுகு
மறைந்துவிடும்.
பேன்
தொல்லை நீங்க வேண்டுமா?
முடியில்
அழுக்குகள்
சேர்வதாலும், வியர்வை பெருக்கத்தாலும், பேன்
உள்ளவர்கள்
பயன்படுத்தும்
சீப்பை உபயோகிப்பதன்
மூலமும் பேன் தோன்றுகிறது.
இதனுடைய
முக்கியமான
உணவுத் தலையில்
உள்ள ரத்தம்
தான்.
*வசம்பை தண்ணீர்
விட்டு
அரைத்து, தலையில்
நன்றாக
தேய்த்து
ஊறியதும்
அலசினால்
பேன் போகும். வேப்பிலை
போட்டு
கொதிக்க
வைத்த
தண்ணீரில்
தலைமுடியை
அலசினாலும்
பேன் தொல்லை நீங்கும்.
*கருந்துளசி
இலைகளை
தலையணையின்
மேலே நன்றாக
பரப்பி
வைக்கவும். அதன்மேல்
மெல்லிய
துணியைப்
போர்த்தி
அத்துணியின்
மேல் படுத்து
உறங்கவும்.
இவ்வாறு செய்து
வந்தால், எல்லா
பேன்களும்
இறங்கி ஓடி
மறைந்துவிடும்.
சத்தான உணவு
இல்லாமல், எப்படிப்
பட்ட விலை
உயர்ந்த
ஷாம்பு
மற்றும்
ஆயில்களை
பயன்படுத்தினாலும்
கூந்தல் வளர்ச்சியை
அதிகரிக்க
முடியாது.
எனவே, உணவு
பழக்கவழக்கத்தில்
கூடுதல்
கவனம் செலுத்துங்கள்
- madukkur.com