நகைச்சுவை - இரசித்தவை
==========================
ஆசிரியர்:
கோபால், அஞ்சும்
மூனும்
எவ்வளவு?
கோபால்:
ம்..ம்.. வந்து.. ஏழு
சார்.
ஆசிரியர்:
என்ன ஏழா? எப்படி
கூட்டினாலும்
வராதேடா?
கோபால்:
தப்பாக்
கூட்டினால்
வரும்
சார்!!!
#######################################
தாத்தா:
டேய் கோ..வாலு! என்னோட
கண்ணாடியக்
காணோம்; கண்ணு
தெரிய மாட்டேங்குது.
நீ கொஞ்சம்
தேடி
எடுத்துக்
கொடுடா.
கோபால்:
போ தாத்தா, எனக்கு
வேலை
இருக்கு. நீயே கண்ணாடியப்
போட்டுக்கிட்டு
தேடி
எடுத்துக்கோ!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தலைமையாசிரியர்:
(பள்ளி ஆண்டு
விழாவில்)
: பள்ளிக்கு
தினமும்
லேட்டா வந்தாலும், முன்
சொன்ன
காரணத்தையே
மறுமுறையும்
சொல்லாமல்
தினம்
புதுப் புது சாக்கு, போக்குகளைச்
சொன்ன வர(ரா)தராஜனுக்கு
இந்த
சிறப்புப்
பரிசு அளிக்கப்படுகிறது.
!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####
இதோ
இன்னொரு லேட்டா
வர்ற ஜோக்;
ஒரு
அலுவலகத்துல
இருந்த லேட்
ரிஜிஸ்டரை பாத்துட்டிருந்த
மேலதிகாரி, லேட்டா
வந்த
எல்லாரையும்
அழைத்து
“எப்போ
ட்ரீட் வைக்கப்போறீங்க?”ன்னு
கேட்டாராம்.
எல்லாரும்
எதுக்குன்னு
தெரியாம
முழிக்க, அந்த
லேட்
ரிஜிஸ்டரைக்
காட்டினாரு.
அதுல
முதல் ஆள் `என்
மனைவிக்கு அதிகாலை
ஆண்மகன்
பிறந்தான்.
மருத்துவமனையிலிருந்து
வர
தாமதமாகிவிட்டது’ ன்னு
எழுதியிருந்தாரு.
லேட்டா
வந்த
எல்லாருமே
அதுக்கு
டிட்டோ போட்டிருந்தாங்களாம்!
=====================================================================