1.அந்த டாக்டர் ஐயப்ப பக்தர்னு
எப்படி சொல்ற..
தலைவலின்னு போனாக்கூட
படிப்படியா
18 நாள் மருந்து
சாப்பிடணும்னு
சொல்வார்.
2.அந்த டாக்டர்
முன்னாலே
சினிமா டைரக்டரா இருந்தார்னு
எப்படி சொல்ற
நோயாளிகிட்டே
4 ரோல் எக்ஃஸ்ரே ஃபிலிம் எடுத்துடுங்கன்னு
சொல்றாரே!!
3.புயல் மழையாலே
மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதுன்னு
சொல்றாங்களே..ஏன்?
மாமூல் வாங்கறவங்க
வாழ்க்கை
பாதிக்கப்பட்டதை
அப்படி சொல்றாங்க
போல யிருக்கு.
4.தயாரிப்பாளர்-கண்ணே..கலைமானே ங்கிற பாட்டை
நீங்க எழுதினீங்களா?
கவிஞர்- ஆமாம்
தயாரிப்பாளர்-
வாங்க கண்ணதாசன்
ஐயா...இவ்வளவு
நாட்கள் நீங்கள் அமரர் ஆகிட்டீங்கன்னு
நினைச்சுக்கிட்டு
இருந்தேன்.
5.உன் பையன்
புதுசா..ஏதோ
பிஸினஸ் ஆரம்பிக்கப்போறதா
சொன்னியே..என்ன பிசினஸ்
மெகா சீரியல்
பார்க்கறச்சே
எப்படி அழணும்னு சொல்லிக்கொடுக்கப்
போறானாம்.
6.கல்யாணம் ஆனதிலே
இருந்து..வனஜாவுக்கு கர்வம்
ரொம்ப அதிகமாயிடுச்சு
ஏன்
அவ புருஷன்
அருமையா சமைக்கிறானாம்.
7.கணவன்- எனக்கு இதுவரைக்கும்
தலைவலிகூட
வந்ததில்லை
மனைவி-உங்களுக்கு
எப்படி வரும்..உங்களாலே மற்றவங்களுக்குத்தானே
தலைவலி.
8.கால் சென்டரில்
வேலை கிடைத்தும்
வேண்டாம்னு
சொல்லிட்டியா?ஏன்?
எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான்
ஆசை.
9.தலைவர்-(பொதுக்கூட்டத்தில்)இவர்கள் ஆட்சியில்
கம்ப்யூட்டர்
சயின்ஸ்தான்
பள்ளியில்
கற்றுக்கொடுக்கிறார்கள்.நாங்கள்
ஆட்சிக்கு
வந்தால் கம்ப்யூட்டர்
ஜியாகரபியும்
சொல்லித்
தருவோம்.
10.அந்த டாக்டர்
முன்னலே ஹோட்டல் வைச்சிருந்தார்னு
எப்படி சொல்றே
வெளியில போர்டுலே'வியாதியஸ்தர்கள்
உள்ளே வரக்கூடாது"
ன்னு போட்டிருக்காரே
11.தலைமறைவா இருக்கும்
தீவிரவாதியை
பிடிக்க மீனவர்கள்
ஒத்துழைக்க
வேண்டும்னு
போலிஸ் கமிஷனர் சொல்றாரே..ஏன்?
வலை வீசி
தேடச்சொல்லி
உத்தரவாம்
12 .இந்த இஞ்செக்ஷன்
ரொம்ப வலிக்கும்...பல்லைக் கடிச்சுக்கிட்டு
பொறுத்துக்கங்க
அப்போ..முதல்லே
பல் டாக்டரைப்
பார்த்து
பற்களை கட்டிக்கிகிட்டு
வந்துடறேன்
டாக்டர்